திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்! லட்சக்கணக்கில் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு தரிசனம்!

Published:

tiruchendur surasamhara - 2026

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டித் திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிந்து, அரஹரோஹரா கோஷம் முழங்க பெருமானை தரிசித்து வழிபட்டனர்.

முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. சஷ்டி விழா தொடங்கிய முதல் நாளில் இருந்தே கோவிலில் திரளான பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து வந்தனர். வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் பலர் இங்கே வந்து தங்கி விரதம் இருந்தனர்.

சூர சம்ஹார நிகழ்வு நாளான இன்று மாலை 4.30 மணி அளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. யானை முக தாரகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்து, தொடர்ந்து சிங்கமுகம் கொண்ட சூரனையும் பின் சுய முகம் கொண்ட சூரபத்மனையும் சம்ஹாரம் செய்த நிகழ்வு நடந்தது. சூரன் தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் மாற, அவற்றையும் வதம் செய்து, சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி சுவாமி ஜெயந்திநாதர் அவற்றை தன் வாகனமாக்கி அருள் புரிந்தார்.

சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img