தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியா ?

 
தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப்போட்டியிடவே விரும்புகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது :-
எனினும் தேர்தல் நேரத்தின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் இளங்கோவன் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மக்கள் ஆதரவுடன் நல்ல ஆட்சி அமையும். செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்டதற்கு நான் காரணம் அல்ல. அதிகாரிகள் தான் காரணம் என்பது போல முதலமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார். இது அப்பட்டமான பொய்.
இந்த ஏரி திறக்கப்பட்டதால் ஏராளமான பேர் இறந்து உள்ளனர். பலர் பாதிக்கப்பட்டனர். எனவே செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்டது குறித்து உடனடியாக உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும்.
இருப்பினும் இது தொடர்பாக முழுமையான விசாரணை நடக்கும் என்று தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லை. எனவே மத்திய அரசு குழு அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் காட்டு பன்றி மற்றும் மயில்களால் விவசாய பயிர்கள் நாசம் ஆகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2004–ம் ஆண்டு விவசாயிகள் கடன் முழுவதையும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது. இதுபோல போதிய விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
விஜயகாந்த் – ஊடக துறை யினர் இடையே நடந்த முழுமையான விவரம் எனக்கு தெரியவில்லை. எனவே இது தொடர்பாக நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. விஜயகாந்த் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியானது அல்ல.
வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவே காங்கிரஸ் கட்சி விரும்பிகிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சி நடத்துவோம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் மத்திய அமைச்சர்அருண்ஜெட்லி போன்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது.
ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினால் போதாது. இதுதொடர்பாக பிரதமர் மோடியை அவர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறிபேசினார்.
திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், அதில் காங்கிரஸ் கட்சியும் இருக்கும் என கருணாநிதி கூறியிருந்த நிலையில், இளங்கோவனின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories