தேசிய பால் தினம்: சாதனை படைக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு விருது வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

milk - 2026

தேசிய பால் தினத்தில், பால்வளத்துறைக்கு மத்திய அரசு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்…! இந்தியா முழுவதும் பாலில் கலப்படம் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்….! பால் முகவர்கள், தொழிலாளர்கள், உற்பத்தியாளர் களுக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்று, மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் சார்பில் அதன் நிறுவுனர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்த அறிக்கையில்.

குடிநீர், மருத்துவம் இவற்றுக்கு அடுத்தபடியாக உயிர் காக்கும் அத்தியாவசியப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தியில் உலகளவில் முதலிடத்தைப் பெற்று இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக திகழ காரணமான வெண்மைப் புரட்சியை உருவாக்கிய “வெண்மைப் புரட்சியின் தந்தை” டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 26ம் தேதி ஆண்டுதோறும் நமது தேசத்தின் பால் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான பால் முகவர்களுக்கும், பால் உற்பத்தியாளர்களுக்கும், பால் வளத்துறையின் மூலம் கிடைக்கின்ற வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கின்ற தொழிலாளர்களுக்கும் குறைந்த வருவாய், உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமை, போதிய உறக்கமின்மை போன்ற பல பிரச்சினைகள் இருந்தாலும் கூட வெயில், பனி, புயல், மழை, வெள்ளம் போன்ற எந்த ஒரு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், சமூக விரோதிகளால் எந்த ஒரு பாதிப்பு வந்தாலும் அனைத்தையும் சகித்துக் கொண்டு பொதுமக்களுக்கு தங்கு தடையற்ற சேவையை வழங்கி வருவதோடு, பால் உற்பத்தியில் இந்தியாவை தலை நிமிரச் செய்து உலகளவில் பால் உற்பத்தியில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கவும், இந்தியா முழுவதும் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதை மனதில் கொண்டு தன்னலம் கருதாமல் பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான பால் முகவர்கள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் “தேசிய பால் தினம்” நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்தியா முழுவதும் பொதுமக்கள் அருந்தும் பாலில் 64%கலப்படம் தான் எனவும், உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனப் பொருட்கள் பாலில் கலப்படம் செய்வது உண்மை தான் எனவும் அதிர்ச்சிகரமான தகவலை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து பல ஆண்டுகள் கடந்த போதும் பொதுமக்களுக்கு கலப்படமற்ற, தரமான பால் கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் இன்னும் உறுதிபடுத்தாத நிலை தான் நீடிக்கிறது. எனவே உயிர் காக்கும் அத்தியாவசியப் பொருளாக விளங்கும் பாலினை தரமான, கலப்படமற்ற வகையில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திடவும், பால் வாங்கவே வழியில்லாமல் தவிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும் தரமான பால் கிடைத்திடவும் மத்திய, மாநில அரசுகள் இனியாவது போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும்,

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில், உற்பத்தியில் இந்தியா முழுவதும் தன்னலம் கருதாமல் செயல்பட்டு வரும் கோடிக்கணக்கான பால் முகவர்கள், தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் நலன் காத்திடும் வகையிலும், பால் உற்பத்தியையும், பால் விநியோகத்தையும் ஊக்குவிக்கின்ற வகையிலும் மத்திய அரசு தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் எனவும்,

இந்தியா முழுவதும் பால் உற்பத்தியில், பால் விநியோகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு மக்கள் நலப்பணியாற்றி வரும் பால் முகவர்கள், தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு “வெண்மைப் புரட்சியின் தந்தை” டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் “தேசிய பால் தினம்” அன்று “தேசிய விருது” வழங்கி கெளரவப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதோடு, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்… என்று கோரியுள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories