இந்திரா காந்திக்கு ஏற்பட்டதுதான் மோடி அரசுக்கும் ஏற்படும் என்று நான் கூறவில்லை என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா விளக்கம் தெரிவித்துள்ளார்
கோவாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய யஷ்வந்த் சின்ஹா, மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாக, “விவாதம் என்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் பெரும் பலமாகும். ஆனால் தற்போது (மத்திய அரசில்) விவாதம் என்பதற்கு இடமே கிடையாது. இந்தியாவில் விவாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களை இந்தச் சமூகம் மண்ணைக் கவ்வ வைக்கும்.
நாட்டில் நெருக்கடி நிலைக்குப் பின், கடந்த 1977-ல் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. அப்போது காணப்பட்டதைப் போன்ற விவாதங்களை அலட்சியப்படுத்தும் தன்மையானது மத்திய அரசை இன்னும் 19 மாதங்கள் மட்டுமே நீடிக்க வைக்கும்.” என்று கூறினார். இது கடும் சர்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சகிப்பின்மையோடு நடந்துக்கொள்வது, விவாதத்தை நசுக்குவது போன்ற செயல்கள் இந்தியாவின் ஆன்மாவிலேயே இல்லை. அதனால்தான் இந்திரா காந்தி தோல்வியடைந்தார். நமது நாட்டில் மாற்று கருத்துகள் தொடர்பான விவாதமும், ஜனநாயகமும் உயிருடன் உள்ளது என்று தான் கூறினேன்” என்று கூறி புது விளக்கம் அளித்துள்ளார்
Dhinasari Tamil News Web Portal Admin