தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து கவர்னர் ரோசய்யா ஆணையிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்களை தமிழக கவர்னர் ரோசய்யா நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 உறுப்பினர்களும் வரும் புதன்கிழமை பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக 10 உறுப்பினர்களின் இடங்கள் காலியாக இருந்தது. இந்த நிலையில்,
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய உறுப்பினர்களை கவர்னர் நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்படும் உறுப்பினர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார்கள்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 உறுப்பினர்கள் விவரம் வருமாறு:-
ஆர்.பிரதாப் குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுசாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணியமூர்த்தி, மு.ராஜாராம் ஐ.ஏ.எஸ். (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர்). ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.