கிரண் பேடியின் கணவர் பிரிஜ் பேடி காலமானார் : அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

Published:

 
நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக பிரமுகருமான கிரண் பேடியின் கணவர் பிரிஜ் பேடி (76) மாரடைப்பால் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
 
சமூக சேவகரான மறைந்த பிரிஜ் பேடி, போதைப் பழக்கத்துக்கு அடிமையான பெற்றோர்களின் குழந்தைகளுக்காக சிறப்புப் பள்ளியொன்றை நடத்தியுள்ளார். இதைத் தவிர பல்வேறு சமூக நலப் பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
 
சிறுநீர்ப் பை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரிஜ் பேடி, டெல்லி அமிருதசரஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில்,தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பிரிஜ் பேடிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
 
பிரிஜ் பேடியின் மறைவுக்குபல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img