தேசத்தைப் பின்னிழுக்கும் சக்திகளுடன் செல்லாதீர்கள்! மதுரையில் மோடி அறைகூவல்!

modi in madurai - 2026

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரை வந்திருந்த பிரதமர் மோடி, பின்னர் பாஜக.,வினர் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இது ஒருவகையில் தேர்தல் பிரசாரக் கூட்டமாகவும் அமைந்தது. மோடியின் பேச்சை பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா மொழிபெயர்த்தார்.

h raja madurai - 2026

தமிழக சகோதர, சகோதரிகளே! உங்களுக்கு என் வணக்கம் என்று தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி தொடர்ந்து அவர் பேசியவை…

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள மதுரையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரியத்தின் அடையாளமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தொன்மையான பாரம்பரிய அடையாளமாக இங்கு அமைந்துள்ளது

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்! மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும்; வாழ்த்துக்கள்!

மதுரை, நெல்லை, தஞ்சையில் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக் கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவைக்கு மட்டுமின்றி, மருத்துவக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கும் உதவியாக இருக்கும்!

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

3 நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி உருவாக்குதே அரசின் நோக்கம்! மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மக்களின் திட்டமாக மாறியுள்ளது!

நோய்த் தடுப்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் அதிகம் கட்டப்பட்டுள்ளன! கிராமப்புற சுகாதாரம் 2014-ல் 38%-ல் இருந்து 98% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது! ஆரோக்கியத்தை மேம்படுத்த தூய்மை இந்தியா திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது!

தமிழகத்தில் மட்டுமே 47 லட்சம் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன! நாட்டின் வளர்ச்சிக்காக உள்கட்டமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன!

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் செயல்பாட்டிற்கு வரும்! மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையுடன் ஏழைகளுக்கு மருத்துவ சேவை வழங்க திட்டம் இடப்பட்டுள்ளது.

மதுரை உட்பட 10 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

தூத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ள இடத்தின் முக்கியத்துவம் கருதி, தூத்துக்குடி முன்னேற்றப் பாதையில் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

தனுஷ்கோடியை ராமேஸ்வரம், பாம்பனுடன் இணைப்பது மத்திய அரசு திட்டம்!

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

தேசிய நெடுஞ்சாலை, நீர்வழிச்சாலை, விமான சேவை, தகவல் தொடர்பு மேம்பாட்டிற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. விமான மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தியின் மையமாக தமிழகம் திகழ நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு, பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோரை பாதிக்காது. 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் சில தமிழக கட்சிகள் எதிர்மறையாக பேசி வருகின்றன; தவறாக சித்திரிக்க முயல்கின்றன! இந்த எதிர்மறை சக்திகளின் பின் செல்லவேண்டாம்.

நாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் உள்நாட்டில் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்!

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, தில்லி முதல் சென்னை வரை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் என்னிடம் ஒரு பிரச்னையைச் சொல்லி என் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார் பிரதமர் மோடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

Topics

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

Entertainment News

Popular Categories