ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய இலங்கையில் கையெழுத்து பிரச்சாரம்:முருகன் தாயார் அறிவிப்பு

Published:

 

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சியில், தமிழக சிறையில் உள்ள 7 தமிழர்களில் ஒருவரான முருகனின் தாயார் சோமினி பேசுகையில், கடும் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை உலக தலைவர்கள் மன்னித்ததற்கு முன்னுதாரணங்கள் உள்ளன. இதே போன்று தன் மகனுக்கும் கருணை காட்டப்படும் என்று நம்புகிறேன். அதற்காக என் மகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி, இலங்கையில் கையெழுத்து பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். 10 லட்சம் கையெழுத்துகளை திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளேன். இந்த கையெழுத்துகளுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

 

சோமினி மகன் முருகன் உள்பட 7 பேர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img