காப்பி அடித்து வெற்றி பெற பெண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என சென்னையில் நமக்கு நாமே பயணத்தின் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து அனைத்து முடிவுகளும் தலைவர் கருணாநிதியே எடுப்பார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகுவோம் என்று அவர் கூறியுள்ளார். 3 மாணவிகள் உயிரிழப்பு தொடர்பான விசாரணை உண்மை வெளிவரும்படி இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் ராயபுரத்தை ரயில் முனையமாக மாற்ற திமுக தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என ஸ்டாலின் தெரிவித்தார்.


