வடகொரியா ராக்கெட் ஏவியதற்கு ஐநா கண்டனம்; அவசர கூட்டத்திற்கு ஐ.நா. அழைப்பு

Published:

வடகொரியா சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தையும் மீறி, அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

 

இதுவரை 3 முறை அந்த நாடு அணுகுண்டு சோதனைகளையும், பல முறை அணு ஏவுகணை சோதனைகளையும் நடத்தி, பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது. ஆனாலும், அதிக சக்தி வாய்ந்த புதிய ஹைட்ரஜன் குண்டு ஒன்றை உருவாக்கி உள்ளதாக அந்த நாட்டின் ஆட்சியாளரான கிம் ஜாங் அன் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த மாதம் 6-ம் தேதி புங்க்யே ரி நகரில் உள்ள அணு ஆயுத சோதனைத்தளத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நீண்ட தூரம் பயணிக்கும் திறன்கொண்ட வடகொரியாவின் இந்த ராக்கெட், தேவையான சமயத்தில் ஏவுகணையாக மாற்றி பயன்படுத்தும் வகையில் வடகொரியா வடிவமைத்து உள்ளது.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Related articles

Recent articles

spot_img