நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன. சமத்துவ மக்கள் கட்சி தலைவராக சரத்குமார், பொதுச்செயலராக ஜெ.பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமத்துவ மக்கள் கட்சி பொருளாளராக சுந்தரேசன், அவைத் தலைவராக செல்வராஜ், துணைத் தலைவர் காளிதாசன், துணை பொதுச்செயலராக மணிமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கட்சியின் மகளிர் அணி தலைவியாக ராதிகா சரத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழுவில் பேசிய கட்சியின் தலைவர் சரத் குமார், நிழலில் இருந்துவிட்டோம்சூரிய ஒளி படும்போது செடி சிறப்பாகவளரும் நெல்லை பொதுக்குழுவில் சரத்குமார் சூசகம் ஜாதிக்கூட்டுக்குள் தன்னை அடைக்கப்பார்க்கிறார்கள். தமிழன் நாட்டை ஆளக்கூடாதா தமிழனுக்கு தன்மீது நம்பிக்கை கிடையாது. அறிவுஆற்றல் இல்லாத இருவர் மட்டும் தான் கட்சியைவிட்டு சென்றிருக்கின்றனர். 234 தொகுதியிலும் தனித்து நிற்க விஜயகாந்த் தயாரா ? நான் தயாராக உள்ளேன் என்றார்.


