தைவானில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 மாதக் குழந்தை 30 மணி நேரத்திற்கு பின் மீட்பு

Published:

தைவானின் தெற்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 462 பேர் இடிபாடுகளிடையே சிக்கியுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதில், 350க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

 

இதனிடையே, இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட 6 மாத குழந்தை 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார். நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடம் ஒன்றின் 5-வது மாடியில் தாயுடன் வசித்து வந்த குழந்தையுடன், 20 வயது மிக்க இளைஞர் ஒருவர் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img