எமதர்மனின் ’ஏஜண்ட்’களாகத் திகழும் ’டுபாக்கூர் மருத்துவர்கள் !

 
எமதர்மனின் மறு உருவமாக திகழும் டுபாக்கூர் மருத்துவர்கள் பணவெறி பிடித்து புற்றீசல் போல தமிழகம் முழுவதும் பொது மக்களின் உயிருடன் விளையாட டுபாக்கூர் மருத்துவமனைகளை தொடங்கி நடத்தி கொண்டே தான் உள்ளனர் எனும் குற்றசாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது .மேலும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் டுபாக்கூர் செவிலியர்களும் பணியாற்றி கொண்டுதான் உள்ளனர் .
 
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் ஒத்தைகடை எனும் கிராமத்தின் பேருந்து நிறுத்தம் அமைத்துள்ளது.
 
அந்த பேருந்து நிறுத்ததத்தில் இருந்து திருமோகூர் செல்லும் சாலையின் நுழைவு வாயிலின் சிறு தூரத்திலேயே எமதர்மனின் மறு உருவமாகத் திகழும் சில டுபாக்கூர் மருத்துவர்கள் போட்டி போட்டுக் கொண்டு டுபாக்கூர் மருத்துவமனைகளை பல ஆண்டுகளாக நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டுபாக்கூர் மருத்துவர்கள் நடத்தி வரும் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்களும் டுபாக்கூர்தானாம்.
 
எமதர்மனின் மறு உருவமாகத் திகழும் டுபாக்கூர் மருத்துவர்கள் அனைவருமே ஏற்கெனவே பல மருத்துவமனைகளில் கம்பவுண்டராக பணியாற்றியவர்களாம்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்தான் டுபாக்கூர் மருத்துவர் ஒருவர் ஒத்தைகடை பகுதியில் நடத்திவந்த அவரது டுபாக்கூர் மருத்துவமனையின் பெயரை மாற்றம் செய்து அந்த பகுதிக்கு இடப் பெயர்ச்சி செய்தாராம்.
 
ஒத்தைகடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் படிப்பறிவு இல்லாத வசதியற்றோர் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அதை டுபாக்கூர் மருத்துவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு வரும்பொழுது அவர்களிடம் உள்ள தொகையைப் பெற்று கொண்டு சிகிச்சை அளித்து விடுவார்களாம்.
 
எவருக்காவது குளுகோஸ் ஏற்ற வேண்டி இருந்தால்கூட டுபாக்கூர் செவிலியர் மருத்துவமனையின் சந்தில் வைத்தே குளுகோஸ் ஏற்றிவிடும் கொடுமையும் அரங்கேறி வருவதாக சொல்லப்படுகிறது.
 
மதுரை மாவட்டத்தில் சில மருத்துவர்கள் பணவெறி பிடித்து புற்றீசல் போல மருத்துவமனைகளை தொடங்கி நடத்தியும் வருகின்றனர்.
 
எமதர்மனின் மறு உருவமாக திகழும் டுபாக்கூர் மருத்துவர்கள் ஏற்கனவே பல மருத்துவமனைகளில் கம்பவுண்டராக பணியாற்றியதால் சில தனியார் மற்றும் அரசு மருத்துவர்களுக்கும் வியாபாரத் தொடர்பு உண்டாம்.
 
அதனால் சில பணவெறி பிடித்த மருத்துவர்கள் டுபாக்கூர் மருத்துவமனைக்கு வந்து அங்கு உள் நோயாளியாக இருப்பவர்களுக்கு சிகிச்சையும் அளிப்பார்களாம்.
 
கடந்த 6 மாதங்களுக்கு முன் உலகநேரி பகுதியில் வசிக்கும் பெற்றோர் ஒருவரது மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி பூப்பெய்தினாராம் . அப்போது அந்த மாணவிக்கு அதிகமான உதிரப் போக்கு ஏற்பட்டு மிகுந்த கடுமையான வேதனைக்கு உள்ளாகி சிரமப்பட்டாராம்.
 
அதைக் கண்ட பெற்றோர்கள் எமதர்மனின் ஏஜெண்ட் அலுவலகமாக திகழும் டுபாக்கூர் மருத்துவமனையில் மகளை மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்களாம்.
 
அப்போது டுபாக்கூர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சேர்ந்து அந்த மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்ததுடன் தவறான மருந்தையும் கொடுத்தனராம். அதனால் அந்த மாணவியின் உடல்நிலை மிகுந்த மோசம் அடைந்ததாம்.
 
அதை அறிந்த எமதர்மனின் மறு உருவமாக திகழும் டுபாக்கூர் மருத்துவர் அந்த பெற்றோர்களிடம் உங்களுடைய மகளை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றால்தான் காப்பாற்ற முடியும் என கூறி கைகழுவி தப்பித்துக் கொண்டாராம்.
 
அதன்பின் அரசு மருத்துவனைக்கு சென்ற மாணவிக்கு கொடுக்கப்பட்ட மேல் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து விட்டாராம்.
 
டுபாக்கூர் மருத்துவருக்கு அரசு மருத்துவனையில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி மாணவிக்கு எமதர்மன் கொடுத்த தவறான சிகிச்சை பற்றிய இரகசியம் வெளிவராமல் பார்த்து கொண்டாராம்.
 
எமதர்மனின் ஏஜெண்ட் அலுவலகமாக திகழும் டுபாக்கூர் மருத்துவமனையில் வைத்து டுபாக்கூர் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சேர்ந்து கொடுத்த தவறான சிகிச்சையால் சுமார் ஆறு பேருக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
 
எமதர்மனின் மறு உருவமாக திகழும் டுபாக்கூர் மருத்துவர்களுக்கு அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவமனைகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள் என பலரிடமும் மிகுந்த செல்வாக்கு உண்டாம் . மேலும் டுபாகூர் மருத்துவர் மாத மாதம் நன்கு கவனித்து விடுவாராம். அதனால் எமதர்மனின் மறு உருவமாக திகழும் டுபாக்கூர் மருத்துவர்களை கண்டு கொள்வதில்லையாம்.
 
பொதுவாக காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவகளின் மருத்துவ கல்வி படிப்பு சான்றிதழ் மற்றும் அந்த மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்களின் கல்வி படிப்பு சான்றிதழ்களை வாங்கி அது உண்மையானதுதானா என ஆய்வு செய்யும் அதிகாரம் காவல் ஆய்வாளருக்கே உள்ளது.
 
தமிழகத்தில் அந்த ஆய்வை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டாலே எமதர்மனின் மறு உருவமாக திகழும் பல டுபாக்கூர் மருத்துவர்களை ஒழித்து விடலாம்.
 
தமிழக காவல்துறையில் மனிதாபிமான நோக்கத்துடன் நேர்மையாக பணியாற்றும் ஒரு சில அதிகாரிகள் மிக இல்லாமல் இருக்கவா போகிறார்கள் ?
 
அவர்கள் தமிழகம் முழுவதும் பொது மக்களின் உயிருடன் விளையாடும் டுபாக்கூர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஒழித்துக் கட்ட அவர்களின் கல்வி சான்றிதழ் அதிரடி ஆய்வு வேட்டை நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல் இருக்கவா போகிறார்கள்? நடக்குமா என்ன ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

Topics

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories