ஆந்திரத்தில் தெரிந்த ஆவேசம்..! தமிழகத்தில் தணிந்த மர்மம்?

modi meet tiruppur - 2026

தமிழகத்தில் எந்த பிரதமருக்கும் இதுவரை இல்லாத எதிர்ப்பு, எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத எதிர்ப்பு, பிரதமர் மோடிக்கு மட்டும் காட்டப்படும் மர்மம் என்ன என்று எல்லோரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் போது, எந்த மாநிலத்திலும் வீராவேசம் காட்டும் மோடி தமிழகத்தில் மட்டும் அமைதியாகச் செல்வது ஏன் என்று இப்போது மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று மாலை தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்க வந்திருந்தார் பிரதமர் மோடி. கோவை வந்து பின்னர் திருப்பூருக்கு வந்த மோடிக்கு உத்ஸாக வரவேற்பு கொடுக்கப் பட்டது. ஆனால் அதற்கு முன்னர் நண்பகல் அவர் ஆந்திரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சில் ஆவேசம் தெரிந்தது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் பேசிய பிரதமர் மோடி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கினர். பாஜக.,வினர் சொந்தக்காசில் கட்சி வளர்க்கின்றனர். ஆனால் மக்கள் பணத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு போய் தில்லியில் அணிவகுப்பு நடத்தி கட்சியை நாட்டு மக்களுக்குக் காட்ட விரும்புகின்றார் என்றார். நாயுடு ஒரு திருஷ்டிப் பொட்டு போல் கருப்பு பலூர் பறக்கவிட்டார் என்றார். இன்னும் தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகம் இருந்தன. ஆனால் திருப்பூர் வந்த பிரதமர் பெயருக்கு வழக்கம் போல் காங்கிரஸை விமர்சித்து விட்டு, தமிழகத்துக்கு தாம் செய்த வளர்ச்சிப் பணிகள், வளர்ச்சித் திட்டங்கள் என்றெல்லாம் பேசி கூடியிருந்த பாஜக., தொண்டர்களையேகூட போர் அடிக்க வைத்தார்.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

இவ்வளவுக்கும் தமிழகத்தில் மோடி குறித்து அவதூறுகள் மிக அதிகம். பாஜக.,வைத் தவிர பெரும்பாலும் எல்லாக் கட்சிகளுமே அவதூறுப் பிரசாரங்களை அள்ளித் தெளித்து வருகின்றனர். திமுக., மேற்கொண்டிருக்கும் வெறுப்பு பிரசாரமோ பொதுமக்களையே முகம் சுளிக்க வைக்கிறது.

வைகோ., உள்ளிட்டோரின் கருப்புக் கொடி, பலூன் ஆர்ப்பாட்டங்கள் இவ்வளவு நடந்தும், வைகோவை சந்தித்துப் பேசுகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது குறித்து மோடி எந்த விமர்சனமும் செய்யவில்லை. திமுக.,வினரின் டிவிட்டர் பொய்ப் பிரசாரம் ஊரறிந்த உண்மை. ஆனால் அது குறித்தும் எதுவும் சொல்லவில்லை மோடி.

வரிசை கட்டி நிற்கும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தோ, பிரச்னைகள் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசாமல், இவை எதுவுமே தமிழகத்தில் நடக்காமல் ஏதோ அமைதிப் பூங்காவாகத் தமிழகம் திகழ்வது போன்ற த்வனியில் சென்றார் மோடி. ஆனால் காரசாரமான தேர்தல் பிரசாரத்தை தமிழகத்தில் எதிர்பார்த்த பாஜக.,வினருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

என்ன நடக்கிறது தமிழக பாஜக.,வில்! நடப்பவை எதுவுமே மோடிக்குத் தெரிவிக்காமல் தமிழக பாஜக.,வினர் மறைக்கிறார்களா? அல்லது இவை எல்லாம் வெறும் தூசு என்று தூசிதட்டிச் செல்கிறாரா மோடி..?!

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

1 COMMENT

  1. Most probably alliance talks are going on in the background and he wont take a stand agsinst any of them unless that becomes clear. Secondly he obviously doesnt want to make these lightweight politicians famous by reacting to their jibes

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories