சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏ.பி.ராஜா கட்சித் தலைவர் சரத்குமார் மீது, மோசடிப் புகார் அளித்தார்.
அந்த புகாரில், தான் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட வாய்ப்புத் தருவதாகக் கூறி, கடந்த 9 ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாய் வரை கட்சித் தலைவர் சரத்குமார் மோசடி செய்தார்.
இதனால், தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், இது தொடர்பாக சரத்குமார் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


