விமான பாதுகாப்பு சோதனையின் போது டர்பனை அகற்ற மறுத்த சீக்கியர், விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
சீக்கிய- அமெரிக்க நடிகரான வாரிஸ் அலுவாலியா, அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து மெக்ஸிகோவிற்கு ஏரோமெக்ஸிகோ விமானத்தில் செல்வதற்காக விமானநிலையத்தில் காத்திருந்தார்.
பாதுகாப்பு சோதனையின் போது தான் அணிந்திருந்த டர்பனை கழற்ற அவர் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அவரை பயணம் செய்ய அனுமதிக்காமல், ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.அவர் விமான பயணம் மேற்கொள்ளவும் தடை விதித்தனர்.


