ராஜீவ் காந்தி வழக்கில் 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் தந்தை சங்கரநாராயணன் காலமானார். அவரது இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பரோலில் வெளிவர வேலூர் சிறைத்துறை அனுமதியுள்ளது.
நளினியின் தந்தை இறுதிச்சடங்கு நாளை சென்னை, கோட்டூர்புரத்தில் நடைபெற உள்ளது. தமிழன உணர்வாளர்கள் அதிகம் பேர் திரளுவார்கள் என்பதால் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.


