நேபாளம் மலைப் பகுதியில் 21 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் மாயமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்கு மலை பகுதியில் நிலவிய அடர்ந்த பனி மூட்டமே காரணம். மயமான விமானத்தை தேடும் பணிகள் நடந்து வருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த விமானம் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் சென்ற 23 பேரும் உயிரிழந்ததாகவும் நேபாள நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் இன்று பிற்பகல் அறிவித்துள்ளது.


