துல்லியத் தாக்குதலுக்கான நேரம் இது…

தியாகிகளின் ரத்தத்தை சம்பிரதாயச் சடங்குகளின் வெப்பத்தில் உலர விடவேண்டாம்

வீரர்களின் உடலை புகழுரைகளின் தீயில் எரியூட்ட வேண்டாம்

விரைவில் சருகாகும் மறதியின் மலர் வளையங்கள் வேண்டாம்

 

அந்த ஆன்மாக்களின் லட்சியம் நிறைவேறும்வரை

தேசியக் கொடியால் மூடப்பட்ட அந்த உடல் சிதிலங்கள்

நினைவின் உறைபனியிலேயே நீடித்து இருக்கட்டும்

 

சில கணக்குகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டாகவேண்டும்.

 

தென் திசை நோக்கிக் கிடத்தப்பட்ட

உடல் வரிசை முன் ஏற்றப்படும் அமர் ஜோதி

எந்த அரசியல் புயல் காற்றிலும்

அணையாமல் எரிந்தாகவேண்டும்

 

தேசத்தின் அனைத்து சாலைகளிலும் ஓடட்டும்

தியாகத்தின் வெதுவெதுப்பான ரத்தக் கலசம் சுமக்கும் ரதங்கள்

 

தேசத்தின் அனைத்து மாடங்களிலும் பறக்கட்டும்

காவல் தெய்வங்களின் சீருடைக் கொடிகள்

 

கல்விசாலைகளின் அறிவிப்புப் பலகை எங்கும் ஒளிரட்டும்

படுகொலை செய்யப்பட்ட வீரர்களின் டிஜிட்டல் பிம்பங்கள்

*

ஒளிரும் பொற்க்ரீடத்தின் விசேஷ வைரக்கல்லைப் பெயர்த்து

தேசிய த்வஜத்தின் நீல தர்மச் சக்கரத்தைப் பொருத்துங்கள்

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

 

பாலை நரகம் சூழ் திரிசங்கு பூமியை

சொர்க்கத்துடன் சேருங்கள் நரன்களின் இந்திரரே

 

பல தரப்பட்ட இசைக்கருவிகள்

ஒன்று சேர்ந்து ஒலிக்கட்டும்

ஒற்றை இசைக்குறிப்பை

 

முன் வரிசையில் நின்றபடி முரண்பட்டு ஒலிக்கும்

இசையறியாத கரங்களில் இருந்து

மீட்கப்படட்டும் சத தந்த்ரி வீணைகள்

 

*

இமயத்தின் ஒற்றைக் கண்ணீர்த் துளி

உருண்டு உருண்டு ஓடையாகி ஆறாகிப் பேராறாகி

இடைப்பட்ட நிலம் முழுவதும் ஈரமாக்கி

இந்து மகா சமுத்திரத் தாய்மடி சேரட்டும்

 

அவற்றோடு தேசத்தின் ஒட்டுமொத்தக் கண்ணீர் துளிகளும்

ஒருங்கிணைந்து உருவாகட்டும்

முடிவற்று அலையடிக்கும் ஒற்றை இந்தியப் பெருங்கடல்

 

பிரிவினையின் புயலில் சிக்கும் தோணிகளை

கரை சேர்க்கும் குமரி அன்னை கொற்றவையாய் உருமாறட்டும்

அவள் அறுத்தெரியும் வெஞ்சின முலைகள்

புண்ணிய தேசத்தின் சனாதன தர்மத்தின்

எதிரிகள் அனைவரையும் எரித்துக் கொல்லட்டும்

 

சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் முளைக்கட்டும்

மண் மூடிய தேச பக்தியின் பெரு வன விதைகள்

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

 

தந்தையைப் பறிகொடுத்த மகள்களின் கதறல்களை

சுமந்து திரியட்டும் நேர்மைச் சிறகு முளைத்த ஊடகப்பறவைகள் எல்லாம்

*

முடிவற்றுப் பெய்யும் பிரிவினையின் பனியை அகற்றி

புதிதாகப் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில்

மெள்ளப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது நம் வாகனம்

 

மெல்லிய குறுக்குக் கம்புகளை மட்டுமே கொண்ட

பிராந்தியக் கிளைச் சாலைகளின் தடுப்பரண்கள்

எப்போதும் போலவே இப்போதும் உடைக்கப்பட்டுள்ளன

 

வன்முறை வசனங்களால் நிரம்பிய புனித நூல் வழிநடத்த

முழுவதும் வெடி மருந்தால் நிரம்பிய வாகனங்கள் மேலும் பல

கிளைச் சாலை புதர் மறைவுகளில் உறுமியபடிக் காத்திருக்கின்றன

 

துல்லியத் தாக்குதலுக்கான நேரம் இது

 

இயல்பான இடைவெளிகளை அகலப்படுத்தி

ஆயுதப் போட்டியைத் தூண்டும்

நவ காலனிய வல்லாதிக்கக் கழுகை நோக்கி

திரும்பட்டும் நம்  அகண்ட பாரதத்தின் ராக்கெட் லாஞ்சர்கள்

 

வல்லாதிக்க வேட்டைக்கு வாலாட்டியபடி

வாய் மூடிக் குரைக்கும் அடிப்படைவாத முகாம்கள் மீது

சீறிப் பாயட்டும் நம் நல்லிணக்கத்தின் ஏவுகணைகள்

 

வர்த்தக முத்து மாலை அணிவித்துக் கழுத்தை இறுக்கும்

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

சிவந்த கொலைக் கரங்களைக் குத்திக் கிழிக்கட்டும்

நம் தற்சார்புத் துவக்குகளின் கூர் கத்திகள்

 

காவல் மாடத் தீப்பந்தங்களை அணைத்து

கோட்டைக் கதவுகளை அகலத் திறந்துவைக்கும்

துரோகிகளை நோக்கி உயரட்டும்

நிலவொளியில் மின்னும் நம் தனிமைப்படுத்தலின் வேல்கள்

 

மறப்பதற்கான நேரம் அல்ல… மன்னிப்பதற்கான நேரமும் அல்ல

துல்லியத் தாக்குதலுக்கான நேரம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

மதமாற்ற விவாதம் … மீண்டும்!

மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.

Entertainment News

Popular Categories