சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய ஜனதா தமிழிசை சவுந்திரராஜன், “நாளை மீண்டும் பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வர இருப்பதாகவும், அவர் தே.மு.தி.க.வுடன் மீண்டும் பேச்சு நடத்த உள்ளார் என்றும் ஏற்கனவே தே.மு.தி.க. கூட்டணியில் இருப்பதால் இந்த கூட்டணி தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ. அலுவலகமான கமலாலயத்தில் கணபதி ஹோமம் நடந்தது. தேர்தல் வெற்றிக்காக நடந்த இந்த யாகத்தில் மாநில தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.