முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 24 வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.
கொலையாளிகள் 7 பேரை விடுதலை முடிவு தொடர்பாக மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஞானதேசிகன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
நளினி உள்ளிட் ட கொலையாளிகள் 7 பேரும் ஏற்கனவே தங்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியிருந்தனர்.
கொலையாளிகள் 7 பேரும் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தவுடன் ஏன் திமுக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை ? என வைகோ, திருமாவளவன் ஆகியோர் வினா எழுப்பியுள்ளனர்.
மேலும் தமிழக சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக அரசாங்கம் அரசியல் ஆதாயம் அடைய ராஜிவ் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தற்போது முடிவு எடுத்து இருக்கலாம் என வைகோ, திருமாவளவன் ஆகியோர் குற்றம்சாட்டி கருத்து கூறியுள்ளனர்


