தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. பெரும்பாலான பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளதாலும், சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதும் பங்குச் சந்தைகளின் உயர்விற்கு துணை புரிந்துள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 183.31 புள்ளிகள் உயர்ந்து 24,426.29 புள்ளிகளாகவும், நிப்டி 52.40 புள்ளிகள் அதிகரித்து 7421.25 புள்ளிகளாகவும் உள்ளன. ஹிண்டல்கோ, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, பிஎன்பி, ஐசிஐசிஐ வங்கி, கெயில் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் லாபம் ஈட்டி உள்ளன.


