January 18, 2025, 6:17 AM
23.7 C
Chennai

வைகோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கோரிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திரத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சாய்கிருஷ்ணா ஆஜாத் பூஜாலா தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் வசிக்கும் தனது மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவில்… ஆந்திர மாநில வனப் பகுதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக செம்மரக் கடத்தலில் ஈடுபடுகின்றனர். வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோரைப் பிடிக்கும் முயற்சியாக மாநில அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் ஆந்திர பேருந்துகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. தடா எல்லையில் ஆந்திர அரசுக்குச் சொந்தமான பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சென்னையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆந்திரத்தை பூர்விகமாகக் கொண்டு தமிழகத்தில் தொழில்புரிந்து வரும் உரிமையாளர்களுக்குச் சொந்தமான கடைகள், உணவகங்கள், கிளப்புகள், வங்கிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. மதிமுக பொதுச் செயலர் வைகோ தமது மாநிலத்தில் உள்ள தெலுங்கு மொழி பேசும் ஆந்திர மாநிலத்தவர்களை வெளியேறும்படி மிரட்டல் விடுப்பதாக செய்திகள் வருகின்றன. ஆந்திர மாநிலத்துக்கு எதிராக அவர் மக்களிடையே கிளர்ச்சி ஏற்படும் வகையில் பேசி வருகிறார். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே அமைதி கெடும் சூழல் உருவாகியுள்ளது. இவை அனைத்தும் ஆந்திர மாநிலத்தவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தில் வசிக்கும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கவும், வைகோ மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது.

ALSO READ:  டோலி.. டோலி... முன்னாள் விவசாயிகளின் மறுபக்கம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை