சென்னை: ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் கும்பகர்ணத் தூக்கத்தில் தமிழக அரசு இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் செய்தியில் ஆசிரியர்களின் கூட்டமைப்பான “ஜாக்டோ” 15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைப்படி தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம், ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஆசிரியர்களின் பணி வரன்முறை செய்து அவர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட 15 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 8ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பேரணி நடத்தினார்கள். பிறகு ஏப்ரல் 19ம் தேதி 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு தீர்த்து வைக்க வேண்டியது நம் கடமையாகும். போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அ.தி.மு.க. அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது.
ஆசிரியர்களின் கூட்டமைப்பான “ஜாக்டோ” 15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஆசிரியர்களுக்… Posted by M. K. Stalin on Sunday, April 19, 2015



