தென்காசி:தென்காசி அருகேயுள்ள சிவராம பேட்டைபகுதியை சார்ந்தவர் ராமசுப்பரமணியன் மற்றும் இவருடன் ஒருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் கொடிக்குறிச்சி இலிருந்து சிவராம பேட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.அப்போது சிவகிரியிலிருந்து தென்காசி நோக்கி மேலப்பாளையம் குறிச்சியை சார்ந்த ராஜேஷ் என்பவரும் அவருடன் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக இவர்களது வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது.இதில் மேலப்பாளையத்தை சார்ந்த ராஜேஷ் என்பவரும் ,சிவராமபேட்டையை சார்ந்த ராமசுப்ரமணியன் என்பவரும் பலியாகினர்.பாதுஷா ,முருகன் ஆகிய இருவரும் காயம்பட்டு நெல்லை மாவட்ட மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.இதில் யார் யாருடன் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் என்றும்,இறந்தவர்கள் யார்…யாரோடு வந்தார்கள் என தெரியாமல் விசாரணையில் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது.இதுகுறித்து இலத்தூர் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கரவாகனங்கள் நேருக்குநேர் மோதி இருவர் பலி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari