மோசடி முகாந்திரம் இருந்தால் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதியலாம்: உயர் நீதிமன்றம்

kamaraj-ministerசென்னை: தமிழக அமைச்சர் காமராஜுக்கு எதிராகத் கொடுக்கப்பட்ட ரூ.45 லட்சம் மோசடி புகார் மீது மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுவதும் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் செய்து வருகின்றேன். சென்னை மைலாப்பூரில் 2009ஆம் ஆண்டு வீடு ஒன்று வாங்கினேன். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய மறுத்தார். அப்போது வக்கீல் ராமகிருஷ்ணன் என்பவர் தன் உறவினர் அதிமுக ராஜ்யசபா எம்பி என்றும், மைலாப்பூர் வீட்டை காலி செய்து தருவதாக ரூ.15 லட்சத்தை 2 தவணையாக வாங்கினார். ஆனால், சொன்னபடி வீட்டை காலி செய்து தரவில்லை. இதையடுத்து அவரது உறவினரான ராஜ்யசபா எம்பியாக இருந்து தற்போது அமைச்சராக உள்ள காமராஜை சந்திக்க, மன்னார்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது காமராஜ், வீட்டை காலி செய்து தருவதாகவும், அதே நேரம் தமிழக சட்டசபைத் தேர்தலில் தனக்கு நன்னிலம் தொகுதியில் ‘சீட்’ கிடைத்திருப்பதாகவும், தேர்தல் செலவுக்கு ரூ.30 லட்சம் தருமாறும் என்னிடம் கேட்டார். நானும் கொடுத்தேன். அவர் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது அமைச்சராக உள்ளார். அதன் பின்னர் அமைச்சர் காமராஜையோ, ராமகிருஷ்ணனையோ என்னால் தொடர்பு கொள்ள முடியாவில்லை. இதையடுத்து, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கடந்த மார்ச் மாதம் புகார் செய்தேன். என்னுடைய புகார் மீது திருவாரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவானந்தம் விசாரணை நடத்தினார். இதை அடுத்து, அமைச்சரின் ஆட்கள் என்னை வீட்டுக்கே வந்து தாக்கினர். இதனால், உயிருக்கு பயந்து நான் தலைமறைவாக வாழ்ந்து வருகிறேன். எனவே, அமைச்சர் காமராஜ் மீது நான் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யும்படி திருவாரூர் மாவட்ட போலீஸ் எஸ்பி., உத்தரவிட வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் கிழமை இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் தனது உத்தரவில், ‘மனுதாரர் விசாரணைக்காக வருகிற 30ஆம் தேதி மன்னார்குடி டிஎஸ்பி முன்பு நேரில் ஆஜராக வேண்டும். அப்போது, மனுதாரருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து டிஎஸ்பி விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த வழக்கு அதிமுக வட்டாரத்திலும், அமைச்சர்கள் வட்டாரத்திலும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories