December 6, 2025, 12:18 PM
29 C
Chennai

குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு

election_chennai

சென்னை :

சென்னை மாவட்டத்தில் 3771 வாக்குச்சாவடிகளுக்கு 9,784 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4841 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 256ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.

அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

இது குறித்து சென்னை மாநகராட்சியின் தேர்தல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாவட்டத்தில் மே 16ந் தேதி வாக்குப்பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மே 2ந் தேதி முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை முதல்சுற்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று இரண்டாம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3771 வாக்குச்சாவடிக்கும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்டதேர்தல் அலுவலர்/ஆணையாளர் டாக்டர்.பி.சந்தரமோகன், தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் (பொது), தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (09.05.2016) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 9784ம், கட்டுப்பாட்டு கருவிகள் 4841ம், ஒப்புகைச் சீட்டு 256ம், வாக்குச்சாவடி வாரியாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது. அண்ணா நகர் தொகுதியில் வாக்களிப்பவர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில் ஒப்புகைச் சீட்டு வழங்கும் கருவிகள் முன்னோடியாக பயன்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு இயயதிரங்களில் வேட்பாளரின் புகைப்படம் மற்றும் சின்னம் பொறித்த ஒட்டு வில்லைகள் ஒட்டும் பணி விரைவில் நடைபெறும். வாக்குப்பதிவிற்கு முதல்நாள் வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து தளவாட பொருட்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்படும்.

நாளை 10ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை மாவட்டத்தில் 10 இலட்சம் பேர் ஒரே நேரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் வகையில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பத்திரிகை, தொலைக்காட்சி அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இயநிகழ்ச்சியில் கலயதுகொண்டு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

2ம் கட்டமாக குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யும் பணி நிகழ்வில் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் (பொது), கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories