December 13, 2025, 11:22 AM
24.8 C
Chennai

இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்; கத்திரி வெய்யிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுரை!

summer - 2025

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெய்யில் இன்று தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள், பெரியவர்களைப் பாதுகாக்க அறிவுரையும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

வருடம் தோறும் புவிக்கு மிக அருகில் சூரியரின் சஞ்சாரம் இருக்கும் மே மாத அக்னி நட்சத்திர வெய்யில் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது ஃபோனி புயல் வேறு மேலும் வெப்பத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. தமிழகம் நோக்கி வரக்கூடும், மழை பெய்யும் என்றெல்லாம் ஆசைகாட்டி மோசம் செய்து திசை மாறிச் சென்று ஒடிசாவையும் மேற்கு வங்கத்தையும் துவம்சம் செய்த ஃபோனி புயல், தமிழக கடற்கரைப் பகுதியை ஒட்டி காற்றின் ஈரப்பதம் முழுவதையும் ஈர்த்துச் சென்றது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமானது. வெய்யில் தகிப்பதால், பொதுமக்கள் அதிக அளவில் சிரமத்தைச் சந்தித்தனர்.

இந்நிலையில் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை மூன்று வாரத்துக்கு கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.

ஏற்கெனவே தமிழகம் முழுவதும் வெய்யிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கத்திரி வெயிலின் காரணமாக தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் வானிலை வல்லுனர்கள்.

நேற்று 12 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரான்ஹீட் அளவை தாண்டி பதிவானது. அதிக பட்சமாக வேலூர் மற்றும் திருத்தணியில் 111 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் பதிவானது. திருச்சியில் 108, மதுரையில் 107, சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரான்ஹீட் என வெயிலின் தாக்கம் இருந்தது.

மதுரை, கரூர் பரமத்திவேலூர், சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் 104, பாளையங்கோட்டையில் 103, பரங்கிப்பேட்டையில் 102, தருமபுரியில் 101, காரைக்காலில் 100 டிகிரி ஃபாரான்ஹீட் என்ற அளவில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் கத்திரி வெயிலும் இன்று தொடங்கியுள்ளதால், பகல் நேரத்தில் வெளியில் செல்வோர் கூடுதல் எச்சரிக்கையுடனும் வெப்பத்தை சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளுடனும் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் சிறுவர்கள், பெரியவர்களை கவனித்து பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

Topics

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

Entertainment News

Popular Categories