இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்; கத்திரி வெய்யிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுரை!

summer - 2026

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெய்யில் இன்று தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகள், பெரியவர்களைப் பாதுகாக்க அறிவுரையும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

வருடம் தோறும் புவிக்கு மிக அருகில் சூரியரின் சஞ்சாரம் இருக்கும் மே மாத அக்னி நட்சத்திர வெய்யில் இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் ஏற்கெனவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தற்போது ஃபோனி புயல் வேறு மேலும் வெப்பத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. தமிழகம் நோக்கி வரக்கூடும், மழை பெய்யும் என்றெல்லாம் ஆசைகாட்டி மோசம் செய்து திசை மாறிச் சென்று ஒடிசாவையும் மேற்கு வங்கத்தையும் துவம்சம் செய்த ஃபோனி புயல், தமிழக கடற்கரைப் பகுதியை ஒட்டி காற்றின் ஈரப்பதம் முழுவதையும் ஈர்த்துச் சென்றது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமானது. வெய்யில் தகிப்பதால், பொதுமக்கள் அதிக அளவில் சிரமத்தைச் சந்தித்தனர்.

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இந்நிலையில் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை மூன்று வாரத்துக்கு கத்திரி வெயில் வாட்டி வதைக்கும்.

ஏற்கெனவே தமிழகம் முழுவதும் வெய்யிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கத்திரி வெயிலின் காரணமாக தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் வானிலை வல்லுனர்கள்.

நேற்று 12 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரான்ஹீட் அளவை தாண்டி பதிவானது. அதிக பட்சமாக வேலூர் மற்றும் திருத்தணியில் 111 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் பதிவானது. திருச்சியில் 108, மதுரையில் 107, சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரான்ஹீட் என வெயிலின் தாக்கம் இருந்தது.

மதுரை, கரூர் பரமத்திவேலூர், சென்னை நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் 104, பாளையங்கோட்டையில் 103, பரங்கிப்பேட்டையில் 102, தருமபுரியில் 101, காரைக்காலில் 100 டிகிரி ஃபாரான்ஹீட் என்ற அளவில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் கத்திரி வெயிலும் இன்று தொடங்கியுள்ளதால், பகல் நேரத்தில் வெளியில் செல்வோர் கூடுதல் எச்சரிக்கையுடனும் வெப்பத்தை சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளுடனும் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் சிறுவர்கள், பெரியவர்களை கவனித்து பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories