வெப்பச் சலனத்தின் காரணமாக, பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
மழை அடுத்த சில நாள்களுக்கு நீடிக்கக்கூடும். உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும்:வானிலை ஆய்வு மையம்
Published:

