ரூ.570 கோடி பறிமுதல் குறித்து பொதுநல வழக்கு போட சென்னை உயர் நீதிமன்றம் போங்க ! : உச்ச நீதிமன்றம் அறிவுரை

 
தமிழகத்தில் திருப்பூர் அருகே கடந்த 14 ம் தேதியன்று ரூ.570 கோடி பணம் கொண்டு வந்த 3 கண்டெய்னர் லாரிகளை பறக்கும் படையினர் தடுத்து பறிமுதல் செய்துள்ளனர்
 
இதுகுறித்து வருமானவரித்துறை, தேர்தல் பார்வையாளர்,தேர்தல் அதிகாரி ஆகிய 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. பிடிபட்ட ரூ.570 கோடி தங்கள் பணம் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில், வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் மனோகர் சப்ரே, அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய கோடைக்கால விடுமுறை அமர்வு முன்பு ஆஜராகி கோரிக்கை விடுத்ததாவது :-
 
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அருகே ரூ.570 கோடி 3 கண்டெய்னர்களில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் இவ்வளவு தொகை கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் கூட இதுபற்றி எந்த கருத்தும் வெளியிடாமல் இருப்பதால் இது பல்வேறு ஐயப்பாடுகளுக்கு இடமளிக்கிறது.
 
இந்த பெரிய தொகை கைப்பற்றப்பட்டு 3 நாட்களாகியும் சம்பந்தப்பட்ட துறைகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மர்மம் அப்படியே நீடித்து வருகிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து விரிவான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரும் பொதுநல மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய அனுமதி வேண்டும்என்று அவர் கூறினார்.
 
அதற்கு நீதிபதிகள், ‘இந்த சம்பவம் தமிழ் நாட்டுக்குள் நடைபெற்று இருப்பதால் இதுபற்றி சம்பந்தப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி அங்கே மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தனர்.
 
அதற்கு வழக்குரைஞர் கிருஷ்ணமூர்த்தி, ‘இது தமிழ்நாட்டில் நடந்ததுடன், இந்த பணத்தை ஆந்திராவுக்கு கொண்டு செல்வதாக கூறியதால் இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகிறது. எனவே உச்ச நீதிமன்றம் விசாரிப்பது முறையாக இருக்கும்’ என்று கூறினார்.
 
அதற்கு நீதிபதிகள், ‘சம்பவத்தில் தொடர்புடைய லாரிகள் தமிழ்நாட்டுக்குள் கைப்பற்றப்பட்டதால் சென்னை உச்ச நீதிமன்றத்தை முதலில் அணுகி மனு தாக்கல் செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories