அமைச்சர் வளர்மதி மகன் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையரிடம் திமுக வேட்பாளர் மனு அளித்துள்ளார். வளர்மதி மகன் மூவேந்தன் மீது நடவடிக்கை கோரி ஆயிரம்விளக்கு திமுக வேட்பாளர் செல்வம் புகார் அளித்துள்ளார். ஆயிரம்விளக்கு தொகுதியில் நேற்று 45,46-வது வாக்கு சாவடிகளை கைப்பற்ற மூவேந்தன் முயற்சி என மனு அளித்துள்ளார். மூவேந்தன் மீது அளித்த புகாரில் துணை ஆணையர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் பர்வேஸ்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேட்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Popular Categories



