அமைச்சர் வளர்மதி மகன் மீது நடவடிக்கை கோரி சென்னை காவல் ஆணையரிடம் திமுக வேட்பாளர் மனு அளித்துள்ளார். வளர்மதி மகன் மூவேந்தன் மீது நடவடிக்கை கோரி ஆயிரம்விளக்கு திமுக வேட்பாளர் செல்வம் புகார் அளித்துள்ளார். ஆயிரம்விளக்கு தொகுதியில் நேற்று 45,46-வது வாக்கு சாவடிகளை கைப்பற்ற மூவேந்தன் முயற்சி என மனு அளித்துள்ளார். மூவேந்தன் மீது அளித்த புகாரில் துணை ஆணையர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் பர்வேஸ்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேட்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

