அதிக நேரம் கால்பந்து விளையாடி உலக சாதனை படைக்கும் முயற்சி தொடக்கம்

Published:

120 மணி நேரம் தொடர்ந்து கால்பந்து விளையாடி புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சி சிலி நாட்டில் நடைபெற்று வருகிறது. சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ-வில் உள்ள பழமையான கால்பந்து மைதானமானத்தில், இந்த முயற்சி நேற்று தொடங்கியது. 60 நிமிடங்களைக் கொண்டதாக ஒரு போட்டி நடத்தப்படுகிறது.
அந்நாட்டு தேசிய அணியின் கோல் கீப்பர் கிறிஸ்டோஃபர் டொஸெல்லி உள்ளிட்ட தொழில்முறை கால்பந்து வீரர்கள் மற்றும் மூவாயிரம் பேர் இந்தச் சாதனைப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். வரும் 22-ம் தேதி வரை தொடர்ந்து போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஸ்காட்லாந்தில் தொடர்ந்து 105 மணி நேரங்கள் கால்பந்து விளையாடியதே இதுவரை சாதனையாக உள்ளது குறிப்பிடதக்கது.

Related articles

Recent articles

spot_img