December 6, 2025, 2:45 AM
26 C
Chennai

ஊக்க மருந்து விவகாரம்: விசாரணையில் ஷரபோவா பதிலளிக்க முடிவு

sharapovaஊக்க மருந்து உட்கொண்ட விவகாரம் தொடர்பாக, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நடத்தும் விசாரணை குழுவினரிடம், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா பதிலளிக்க உள்ளார்.

ரஷ்ய டென்னிஸ் விராங்கனை மரியா ஷரபோவா, ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபணம் ஆனதை, கடந்த மார்ச் மாதம் ஒப்புக் கொண்டார். இருப்பினும் ஊக்கமருந்து சோதனை தடுப்புக் கழகம் தடை செய்துள்ள மெல்டோனியம் என்ற பொருள், தான் உட்கொண்ட மருந்துகளில் கலந்திருந்ததாகவும், இதனால் வேண்டும் என்றே ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே, மெல்டோனியம் தடை செய்யப்பட்ட பொருளாக அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் தான் கடந்த சில ஆண்டுகளாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் அந்தப் பொருள் கலந்திருத்ததால், தான் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரை தற்காலிகமாக தடை செய்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ய, நாளை லண்டனில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சார்பில் விசாரணை நடைபெற உள்ளது. அந்த விசாரணையின் போது, மரியா ஷரபோவா நேரில் ஆஜராக விளக்கமளிப்பார் என தெரிகிறது.

மெல்டோனியம் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின், ஏராளமான வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபிக்கப்படும் பட்சத்தில், சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தால், நான்கு ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும் முதல் தடவை உபயோகித்திருந்தாலோ, அல்லது ஊக்கமருந்து உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தெரியாமல் உடலில் ஊக்கமருந்து சென்றிருந்ததாலோ தண்டனைக் காலம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories