February 21, 2026, 12:30 AM
26.7 C
Chennai

ஊக்க மருந்து விவகாரம்: விசாரணையில் ஷரபோவா பதிலளிக்க முடிவு

sharapovaஊக்க மருந்து உட்கொண்ட விவகாரம் தொடர்பாக, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நடத்தும் விசாரணை குழுவினரிடம், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா பதிலளிக்க உள்ளார்.

ரஷ்ய டென்னிஸ் விராங்கனை மரியா ஷரபோவா, ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபணம் ஆனதை, கடந்த மார்ச் மாதம் ஒப்புக் கொண்டார். இருப்பினும் ஊக்கமருந்து சோதனை தடுப்புக் கழகம் தடை செய்துள்ள மெல்டோனியம் என்ற பொருள், தான் உட்கொண்ட மருந்துகளில் கலந்திருந்ததாகவும், இதனால் வேண்டும் என்றே ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே, மெல்டோனியம் தடை செய்யப்பட்ட பொருளாக அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் தான் கடந்த சில ஆண்டுகளாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் அந்தப் பொருள் கலந்திருத்ததால், தான் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரை தற்காலிகமாக தடை செய்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ய, நாளை லண்டனில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சார்பில் விசாரணை நடைபெற உள்ளது. அந்த விசாரணையின் போது, மரியா ஷரபோவா நேரில் ஆஜராக விளக்கமளிப்பார் என தெரிகிறது.

மெல்டோனியம் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின், ஏராளமான வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபிக்கப்படும் பட்சத்தில், சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தால், நான்கு ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும் முதல் தடவை உபயோகித்திருந்தாலோ, அல்லது ஊக்கமருந்து உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தெரியாமல் உடலில் ஊக்கமருந்து சென்றிருந்ததாலோ தண்டனைக் காலம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories