ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சர் ஆகிறார் ! : பிரதமர் மோடி, தமிழக ஆளுனர் ரோசய்யா வாழ்த்து

 
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சியைப் பிடித்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சர் ஆகிறார்.
ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி-கவர்னர் ரோசய்யா வாழ்த்து தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உள்ள ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி, தமிழக ஆளுனர் ரோசய்யா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்ட சட்டமன்ற தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளுக்கு கடந்த 16-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில், பெரும்பாலான தொகுதிகளை அ.தி.மு.க. முன்னிலை பெற்றது. எனவே, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்ற தகவல் பரவியதையடுத்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கோலாகலமாக கொண்டாடிவருகிறார்கள்.
 
இதற்கிடையே, தமிழக ஆளுனர் ரோசய்யா, தொலைபேசியில் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இத்தகவலை மோடி அவரது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகமுதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மம்தா பானர்ஜிக்கும் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
 
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மோடி, மக்களுக்கு எப்போதும் சேவை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories