தாகத்தால் தவிக்கும் சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

water bump - 2026

தண்ணீர் இன்றி கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ள சென்னை நகர மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறது வானிலை!

வரும் 18ஆம் தேதி (செவ்வாய்) முதல் ஒரு வார காலத்திற்கு சென்னை நகரில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்பது தான் அந்த மகிழ்ச்சியான செய்தி. இதன் மூலம் நீர்நிலைகளில் நீர் சேரவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறப் படுகிறது.

சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படலாம் என்று கூறப் பட்டது.

குடிநீர் மற்றும் கழிவறைகளுக்கு தேவையான நீர் கிடைக்காததால் பள்ளிகள் இயங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாயின.  இது அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும் என்பதால் பள்ளி நிர்வாகிகள் தரப்பிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனராம்.

தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் பலவும் தண்ணீருக்காக பெரும் செலவு செய்வதால், தங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று புகார்களைத் தெரிவித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகரில் உள்ள சில தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை  வீடுகளில் இருந்தே பணி செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும், வீடுகளிலும் தேவையான தண்ணீருக்கு சிரமப் படுவதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

சென்னை நகரில் மட்டுமல்லாது, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பருவ மழை அல்லது புயல் மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.  இந்நிலையில், அடுத்த வாரம் சென்னைக்கு மழை வாய்ப்பு இருப்பதாகக் கூறப் படுவது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்திதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories