“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் “

“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் ”

(கண் தெரியாத சங்கரனுக்காக காஷ்டமௌனம்
கைவிட்ட பெரியவா)

(சற்று விரிவான புதிய தட்டச்சு)?ui=2&ik=b3e3dcecb5&view=fimg&th=155dff30324eb749&attid=0 - 2026

சொன்னவர்-திருவாடானை ‘வன்தொண்டர்’
…………………….சங்கர அய்யர்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

புதுக்கோட்டையில் ஆறாவது வகுப்பில் படித்துக்
கொண்டிருந்த போது ‘வெள்ளையனே வெளியேறு’

போராட்டத்தில் கலந்து கொண்டு துப்பாக்கிச்
சூட்டினால் அவருடைய கண்கள் பாதிக்கப்பட்டன.
முதுமலையில் தலைமறைவாக இரண்டு வருஷம்
இருந்தார். இரண்டு கண்களும் முழுதும் குருடாய்
விட்டன.சொல்ல முடியாத துக்கத்துடன்
 தேவகோட்டை ஜமீந்தார் என்று பிரசித்தி பெற்ற
 கொடை வள்ளலான நாட்டுக்கோட்டை 
செட்டியாருடன் 1950-ல் முதல் முதலில்
 ஸ்ரீபெரியவாளை தரிசனம் செய்தார்.
அதுவே அவர் வாழ்க்கையில் திருப்புமுனை.

ஸ்ரீபெரியவாள், “சங்கரா, நீ தொண்டு 

செய்வதற்காகவே உன்னைக் கடவுள் இப்படி
 சோதனைக்குட்படுத்தியிருக்கிறார். ஒரு குறைவும்
வராது. தொண்டு செய்து கொண்டே இரு” என்று
ஆசீர்வாதம் செய்த உடனேயே பல வருடங்களாக
அனுபவித்த துக்கம் இருந்த இடம் தெரியாமல்
மனது இலேசாகி விட்டது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

பிறகு,தமிழை நன்றாகக் கற்று சைவ,வைணவ
நூல்களை,முழுவதும் மனப்பாடம் செய்யும்

அளவிற்குத் தேர்ச்சி பெற்று,குழந்தைகளுக்கு
பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
அருணகிரிநாதரின் கந்தரனுபூதி இவருக்குப்
பிரியமான நூல். இவருடைய சொந்தக்காரப் பெண்
ஒருத்தி தானாக முன் வந்து விவாஹம் செய்து
கொண்டாள். சங்கர அய்யர் ஊர் ஊராகச் சென்று
பையன்கள்,பெண்களுடன் பஜனை செய்வது
வழக்கம்.நாடகமும் நடத்துவார். குழந்தைகளுக்கு
பரீக்ஷை வைத்து பரிசுகள் கொடுப்பார். இதில்
கிருஸ்தவ,முஸ்லீம் மாணவர்கள் கூட சேருவதுண்டு

இவர் செய்யும் தமிழ் சேவையைப் பாராட்டி
கிருபானந்தவாரியார் இவருக்கு ‘வன்தொண்டர்’

என்று பட்டம் சூட்டினார்.

ஸ்ரீபெரியவாளை தரிசனம் செய்யும் போதெல்லாம்
தேவாரம்,திருவாசகம்,திருக்குறள் முதலியவைகளைப்
பற்றித்தான் பேச்சு. ஸ்ரீபெரியவாளைப் பற்றிக்
கூறினாலே கண்ணீர் பெருகும். ‘அவர்களைப் போல்
தமிழறிந்தவர்கள் வேறு யார் உளர்?’ என்ற வியப்பு.

இப்பொழுது அவருக்கு வயது எழுபத்தாறு.
(கட்டுரை வெளியான ஆண்டு 2005) அவருடைய
எழுபது வயதில், இப்போது முன்னேற்றமடைந்த கண்
சிகிச்சையினால் கண்பார்வை திரும்பக் கிடைக்கும்
என்று நண்பர்கள் விளக்கிய போது அவர் 

“ஸ்ரீபெரியவாள் அனுக்ரஹத்தினால் கண் 
தெரியாமலேயே சந்தோஷமாயிருக்கிறேன்.இனிமேல்
கண் பார்வை பெற்று என்ன ஆக வேண்டியிருக்கிறது?”
என்று மறுத்து விட்டார்.

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

1958ம் வருஷம் ஸ்ரீபெரியவாள் சென்னை சம்ஸ்கிருத
கலாசாலையில் முகாமிட்டிருந்த போது
விடியற்காலையில் விஸ்வரூப தரிசனத்திற்காக
தேவகோட்டை ஜமீந்தாருடன் சென்றிருந்தார்.
அப்பொழுதெல்லாம் பெரியவாள் காலை வேளையில்
காஷ்ட மௌனமாக இருப்பது வழக்கம். ஆனால்
இவர்கள் இருவரும் வந்ததும் பெரியவாள்,
“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் ” என்று
சொன்னதும் எல்லோருக்கும் ஆச்சர்யம்.

சாயங்காலம் தீப நமஸ்காரம் ஆன பின்பு
ஸ்ரீபெரியவாள்,”இன்று காலையில் மௌனத்தை
விட்டுப் பேசியது உங்கள் எல்லோருக்கும்
ஆச்சர்யம். ஆனால் ஒருவருக்கும் காரணம்
தெரியவில்லை. நீங்கள் எல்லோரும் விடியற்
காலையில் என்னைக் கண்டு சந்தோஷப்படுகிறீர்கள்

ஆனால் கண் தெரியாத சங்கரனுக்கு எப்படி
சந்தோஷம் ஏற்படும்? அதனால்தான் என் குரலைக்
கேட்டாவது சந்தோஷப்படட்டுமென்று பேசினேன்”
என்றார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories