சகிப்பின்மை தொடர்பாக பிரதமர் மோடிக்கு அறிவுஜீவிகள் சிலர் கடிதம் எழுதியதாக செய்தித்தாள்களில் தகவல் வெளியானது இந்நிலையில் அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து தன்னுடைய கையெழுத்து இல்லை என்று டைரக்டர் மணிரத்னம் கூறியிருக்கிறார்.
பசு வதை தடுப்பு, ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்புவது என்னும் பேரில் அப்பாவி மக்கள் கொலை செய்ய படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
ஆனால் இதை மணி ரத்னம் மறுத்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறேன் , பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இருப்பது என்னுடைய கையெழுத்தில்லை.இ
இதுபோன்றஎ கடிதமும் என் கவனத்திற்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.