முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை நினைவு கூர்ந்த டாக்டர் தமிழிசை!

Published:

tamilisai soundarrajan 1 - 2026

இந்தியாவின் முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள். ஆணுக்கு பெண் இங்கே இளைப்பில்லை காண் என்ற பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக சாதித்துக் காட்டியவர். புதுக்கோட்டை திண்ணைப் பள்ளியில் படித்து சென்னை மருத்துவக் கல்லூரியில் முதல் பெண் மருத்துவரான 1907-1912 பெருமையுடன் நினைவில் வாழ்க..

பெண் மருத்துவ சாதனையாளர் உயர்படிப்பு ஆராய்ச்சியாளரானதோடு மருத்துவ தொண்டு மட்டும் போதுமென்று நின்றுவிடாமல் பொதுவாழ்வில்இணைத்துக்கொண்டு பின்னாளில் சென்னை மாநகராட்சியின் துணை மேயரானார்.அவர்பிறந்த நாளை அரசு மருத்துவமனை தினமாக கொண்டாடும் @CMOTamilNadu @Vijayabaskarofl பாராட்டு – என்று குறிப்பிட்டுள்ளார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

முன்னதாக, தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூலை 30ம் தேதி மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

muthulakshmireddy - 2026இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில்…

தமிழகத்தில், மருத்துவமனைகள் தினத்தை, ஒவ்வொரு மருத்துவமனையும், ஏதாவது ஒரு நாளில் கொண்டாடி வந்தன. இந்தாண்டு முதல் நாட்டின் முதல் பெண் டாக்டர், முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளான ஜூலை, 30ல், மருத்துவமனை தினத்தை கொண்டாட, அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சென்னை மருத்துவக் கல்லுாரியில் 1907ல் மருத்துவம் பயின்றார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை துவங்க காரணமாக இருந்தார்.
சட்டசபையில் முதல் பெண் எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தார். எனவே, முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளான இன்று, தமிழகத்தில் மருத்துவமனை தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூலை 30ம் தேதி மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும்.

மருத்துவமனை தினத்தை கொண்டாட அரசு மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விழாவைக் கொண்டாட ‘மருத்துவமனை தினக் குழு’வும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனையின் பல்வேறு சேவைகளை காட்சிப்படுத்துதல், மருத்துவமனையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் தொண்டு நிறுவனங்கள், கொடையாளர்கள், சமூக அமைப்புகள் மற்றும் நன்கொடை அளிக்கும் நிறுவனங்களையும் அங்கீகரித்து பாராட்ட வேண்டும்… என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img