‘கும்பேஸ்வரன்’னு பேர் வை..”

Published:

20fr_mahaperiyava10_634796g

‘கும்பேஸ்வரன்’னு பேர் வை..”

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

செல்லையா முதலியார் தம்பதிகளுக்குக்
குழந்தைகள் இல்லை.

பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

“ரெண்டு பேரும் பிரதோஷ விரதம் இருங்கோ.

அன்னிக்கு சாயரட்சை சிவதரிசனம் பண்ணிவிட்டு
பலகாரம் பண்ணலாம்.சுவாமி அபிஷேகத்துக்கு
ஒரு குடம் நிறைய பால் கொடுக்கணும். குடத்தை,
கோயிலிலேயே வெச்சுட்டு வந்துடு…. யார்
வேணுமானாலும் எடுத்துண்டு போகட்டும்….”

தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது.
பெயர் வைக்கணுமே?.

பெரியவாளிடம் வந்தார்கள்.

” நீ குடம் குடமா பாலபிஷேகம் பண்ணியிருக்கே.
குடம்னா, கும்பம். கும்பத்தினால் ஈஸ்வரனுக்கு
அபிஷேகம்!.. ‘கும்பேஸ்வரன்’னு பேர் வை..”

 
முதலியார் தம்பதிகள் ஆட்சேபிக்கவில்லை.
‘எங்கள் குடும்பத்தில் இந்த பெயர் சூட்டுவது
வழக்கமில்லை என்று முணுமுணுக்கக்கூட இல்லை’!

‘கும்பேஸ்வரனை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்.!

Related articles

Recent articles

spot_img