கீழப்பாவூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நெல்லை மாவட்டம், தென்காசி கோட்ட அளவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கீழப்பாவூர் நேருநகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தென்காசி செயற்பொறியாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மேலும் மின் உற்பத்தி உதவி செயற்பொறியாளர், சுரண்டை, தென்காசி மற்றும் தென்காசி கோட்டத்திலுள்ள உதவி மின் பொறியாளர்கள், இளமின் பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள், வயரிங் காண்ட்ராக்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் அதிகாரிகள் மின்சார சிக்கனம் ,மின்சார பாதுகாப்பு ,மற்றும் மின்சாதனங்களை கையாளும் முறை மற்றும் எல்.ஈ.டி பல்புகள் பயன்படுத்தவும் அதன் பயன்கள் குறித்து பேசினார்கள் மேலும் மின்வாரிய ஊழியர்கள் தங்களின் அனுபவங்களை பொதுமக்களோடு பகிர்ந்துகொண்டனர்
கலந்து கொண்ட பொதுமக்கள் மின்சாதனங்களை தாங்கள் கையாளும் விதம் குறித்தும் மின்பாதுகாப்பு சம்பந்தமாக தங்களது சந்தேகங்களை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டன
கீழப்பாவூரில் மின்சாரவாரியம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
Popular Categories



