
https://soundcloud.com/naribala/a8gbp6p1lu6l
நின்றந்த மயிலொன்று தாளங்கள் போட
கண்டந்த வண்டொன்று ரீங்காரம் பாட
கன்றொண்டு வாலினால் சாமரம் போட
எங்கள் கண்ணனும் குழலூதி கானங்கள் பாட
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா.. கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
பக்த கோலாஹலா ச்ந்த ப்ருந்தவனா ஆனந்த கோபி ஜனாம்போதி சந்திரா
எப்போது இதைப்போல ஏற்றையோ காதே
இன்னும் உனக்கு ஏற்றவரை ஏதும் தப்பாதே
அப்போது இப்போது உரைத்தால் ஆகாதே
ஆகையால் மற்றதையும் ஆய புகாதே
நீல ஒளி மேனியதில் நின்றாடும் மாலை
பேருயர வானுயர வான பசும் சோலை
கோலமொடு கோவிந்தன் குழலூதும் வேலை
நில்லாது போகுமோ இங்கென்ன வேலை
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா ..கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
நித்ய கோலாஹலா கந்த ப்ருந்தவனா ஆனந்த கோபி ஜனாம்போதி சந்திரா
அங்கே இங்கே என்று அலையாதே மனமே
ஆழ்ந்து பார் உன் உள்ளே ப்ருந்தாவனமே
தங்காது கண்ணனின் பேர் பாடும் உணமே
அது தானாக தோன்றுமே சங்கையே இனிமேல்
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
நித்ய கோலாஹ சந்த பிருந்தாவன கோபி ஜனாம்போதி சந்திரா



