December 6, 2025, 3:07 PM
29.4 C
Chennai

போர் அடிக்குது இந்த போதை… த்ரிஷா போட்ட ட்வீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!

trisha krishnan
trisha krishnan

பேஸ்புக், ட்விட்டர் என சமூகத் தளங்களை போதை என வர்ணித்த நடிகை த்ரிஷா, இவற்றுக்கு தற்காலிகமாக விடை சொல்லி, இந்தக் கொரோனா ஊரடங்கு நேரத்தில் முழுக்கு போட்டதற்கு, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

சென்னை அழகியாக மிஸ் சென்னை நிலையில் இருந்து  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆன திரிஷா இரு பத்து ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவே கோலோச்சி சாதனை படைத்துவிட்டார்..

அவர்,  இந்தப் பொது முடக்க காலத்தில், டிஜிட்டல் ஒரு போதை  என்று கூறி சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளர். ரசிகர்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுரையும் கூறியுள்ளார்.  

கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்த கொரோனா பொது முடக்க காலத்தில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர் நடிகைகள் வீடுகளில் முடங்கிப் போயுள்ளனர். 

இந்த பொது முடக்க காலத்தில் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது, எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பலரும், தங்களது திறமைகளை, எழுத்துகளை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். எழுத்தாளர்கள் தாங்கள் சந்தித்த பிரபலங்கள் தங்களுடன் பழகியவர்கள் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்கள் எழுத்து என பலவற்றை சமூக ஊடகங்களில் தினந்தோறும் எழுதி வெளிப்படுத்தி வருகின்றனர் 

நடிகர்களும் தங்களது அனுபவங்களை பொழுது போகாமல் ஓரிரு வரிகளில் படங்களுடன் வெளிப்படுத்தி வருகின்றனர் நடிகைகள் பலரும் சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் விதவிதமான போஸ்களில் புகைப்படங்களையும் பழைய புகைப்படங்களையும் வெளியிட்டு தங்களது இருப்பை ரசிகர்கள் உடனான உரையாடல்கள் மூலம் உறுதிப்படுத்தி வருகின்றனர் 

இந்த நிலையில், நடிகை திரிஷா, சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளது அவரது தீவிர ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திரிஷா தனது டிவிட்டர் பதிவில் தெரிவிக்கையில், “ இந்த நேரத்தில் என் மனதிற்கு ஒரு மறதி தேவை. ஆனாலும் டிஜிட்டல் ஒரு போதை… தற்போது இவை வேண்டாம்.

வீட்டிலேயே இருங்கள்! பாதுகாப்பாக இருங்கள்! இதுவும் கடந்துபோகும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/trishtrashers/status/1271798040995627013

இருந்தாலும் ரசிகர்களுக்கு போர் அடிக்காமல் இருக்க, த்ரிஷா ஆடிய அழகான ஆட்டம் டிக்டாக்கில் ரசிகர்களின் பலத்த வரவேற்புடன் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories