பூட்டிய கோவில்கள் முன் பக்தர்கள் மொட்டை; கிராமக் கோயில்களுக்கும் படையெடுப்பு!

village temple
village temple

வைரஸ் தொற்று, பொதுமக்களை பல வகைகளில் வதைத்து வருகிறது. பொது போக்குவரத்து முழுமையாக இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை, வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு கஷ்டமான நிலை ஏற்படும் போது, அவர்களின் ஒரே நம்பிக்கை கடவுள் வழிபாடு தான். தங்கள் குறைகள் தீர வேண்டும் என விரதம் இருந்து, நேர்ச்சை நேர்ந்து கோவிலுக்குச் செல்வது வழக்கமாக உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கோவில்கள் அனைத்தும், வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 80’நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற பெரிய கோவில்களில் மூண்று காலபூஜைகளும், சிறிய கோவில்களில் ஒரு காலபூஜையும் நடைபெற்று வருகிறது. பூஜை நடைபெறும் சமயம் கோவிலுக்குள் பூஜை வைப்பவர்கள் தவிர, பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

temple gopuram
temple gopuram

இந்தக்கட்டுப்பாடுகள் மக்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் சில தினங்களாக, பூட்டியிருக்கும் கோவில்கள் முன்பு, சூடம் ஏற்றி மக்கள் சாமியை மானசீகமாக வணங்கத் தொடங்கியுள்ளனர்.

பெரும்பாலான மக்கள் கிராமக்கோவில்களுக்கும், ஊருக்கு வெளியே இருக்கும் குலதெய்வக் கோவில்களுக்கும் சென்று சாமி கும்பிட்டு வருகின்றனர்.

ஞாயிறுக் கிழமை குடும்பம் குடும்பமாக கோவிலுக்குச் சென்ற மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மொட்டை போட்டு முடி காணிக்கையும் செய்து வருகின்றனர். இதனால் விடுமுறை நாளான ஞாயிறுக் கிழமை கிராமக் கோவில்கள் களைகட்டியது.

வைரஸ் பரவல் முடிவுக்கு வந்து, அனைத்துக் கோவில்களும் விரைவாக திறக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது.

  • செய்தி: ரவிசந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories