நவராத்திரி விரதத்தை ஒரு முறை கடைபிடித்தால் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டுமா?

Published:

Golu kankatchi2
Golu kankatchi2

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன்

கேள்வி: நவராத்திரி விரதத்தை ஒருமுறை கடைபிடித்தால் வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டுமா?

பதில்: சரந் நவராத்திரி விரதத்தை நித்ய கர்மா என்று அழைத்தார்கள். உண்மையில் இதனை நைமித்திகம் என்று அழைக்க வேண்டும். ஆனால் நித்ய கர்மா என்று கூறுவதன் உத்தேசம் என்னவென்றால் செய்து தீர வேண்டும் என்று பொருள்.
சிலச்சில பருவகால பண்டிகைகளை, சில விரதங்களை செய்யலாம்… செய்யாமல் விடலாம். ஆனால் சரந் நவராத்திரி விரதம் மட்டும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றே கூறப்படுகிறது.

அதனால் தீட்சையாக ஏற்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும்  கடைபிடிக்க வேண்டும். அதனால், இந்த ஆண்டு செய்தால் அடுத்த ஆண்டும் செய்ய வேண்டுமா என்று கேட்பதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே விதி.

ஆயின், ஒரு ஆண்டு இதனை  மிகச் சிறப்பாகச் செய்யலாம். பிறிதொரு ஆண்டு  அத்தனை சிறப்பாகச் செய்ய இயலாமல் போகலாம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவரும் விதிமுறைகளோடு இந்த திவ்யமான சரந் நவராத்ரி விரதத்தை  கடைப்பிடிக்க வேண்டும் என்றே சாஸ்திரம் தெரிவிக்கிறது. 

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img