திருப்பாவை – 20 : முப்பத்து மூவர் (பாடலும் விளக்கமும்)

thiruppavai pasuram 20 - 2026
andal-vaibhavam

ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாடலும் விளக்கமும்

விளக்கவுரை: வேதா டி.ஸ்ரீதரன்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய். (20)

பொருள்

அமரர் துயர் துடைப்பதில் முதன்மையானவனாக விளங்குபவனே! பக்தர்களின் துயரங்களுக்கு முடிவு கட்டுபவனே, நீ எழுவாயாக! அனைத்து நற்குணங்களும் பொருந்தியவனே! அனைத்து ஆற்றல்களும் அமையப் பெற்றவனே!

மாசு நிரம்பிய ஜீவர்களுக்கு மறக்கருணை காட்டி அவர்களது குறைகளை நீக்கி அருளும் தூய்மைப் பொருளே, துயில் எழுவாயாக! மங்களமே வடிவெடுத்த நப்பின்னைத் தாயே! சகல ஐசுவரியங்களும் நிரம்பியவளே! துயில் எழுவாயாக! உன்னை ஆட்கொண்ட அந்தக் கண்ணனுக்கு வெண்சாமரம் வீசி, திருமுகம் காட்டித் துயில் எழுப்புவாயாக. உங்கள் இருவரின் தரிசனத்தைப் பெற்று நாங்கள் ஆனந்த மழையில் நீராடக் காத்திருக்கிறோம். அருள்புரிவாய்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
andal srivilliputhur
andal-srivilliputhur-1

அருஞ்சொற்பொருள்

முப்பத்து மூவர் அமரர் – முப்பத்து முக்கோடி தேவர்கள்

கப்பம் – நடுக்கம்

கலி – முடிவுக்குக் கொண்டு வருபவன், பெரு வீரன்

செப்பம் – செம்மை

திறல் – திறமை, ஆற்றல்

செற்றார் – தீயவர், எதிரிகள் (அடியார்களுக்குத் தீங்கு செய்பவர்கள்)

விமலன் – தூயவன்

செப்பு – செம்புக் கலசம்

அன்ன – போன்ற

செவ்வாய் – செம்மையான வாய், சிவந்த வாய்

மருங்குல் – இடை

திரு – ஐசுவரியம், மகாலக்ஷ்மி

உக்கம் – விசிறி

தட்டொளி – கண்ணாடி (தட்டு ஒளி)

நீராட்டு – (எங்களை) மகிழ்ச்சியடைய வைப்பாயாக

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்த்தல் –

பகவானின் எத்தனையோ அவதாரங்கள் அசுர சம்ஹாரத்துக்காக நிகழ்ந்தவையே. இவை அனைத்தும் தேவர்களின் துயரையும், பக்தர்களின் துயரையும் துடைப்பதற்காக. வாமன அவதாரம், ராமாவதாரம் எனப் பல்வேறு நாமாக்களில் வெவ்வேறு அவதாரத்தைப் போற்றிய ஆண்டாள், இங்கு மொத்தமாக அனைத்து அவதாரப் பெருமையையும் பேசுகிறாள்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

கப்பம் – கம்பனம்

கம்பனம் என்றால் நடுக்கம். நடுக்கத்துக்குக் காரணம் பயம். பயத்துக்குக் காரணம் தீமை.

கப்பம் என்பதற்கு அடிமைப்படுவது என்றும் பொருள் கொள்ளலாம். தேவர்கள் அசுரர்களுக்கு அடிமைப்படாமல் ஓடிச்சென்று காத்தவன்.

செப்பன்ன – முற்காலங்களில் பணம், நகை முதலானவற்றை செப்புக் குடங்களில் போட்டு வைப்பார்கள். எனவே, செப்பு என்பது பொக்கிஷம் நிரம்பி இருப்பதைக் குறித்தது. தாயாரின் இதயத்தில் இருக்கும் பொக்கிஷம் காருண்யம்.

உக்கமும் தட்டொளியும் – அதிகாலையில் அரசர்களுக்குச் செய்யப்படும் வந்தி உபசாரங்கள் (வந்தி உபசாரம் என்பது அரசனுக்குச் செய்யப்படும் உபசாரம். வைத்தாலிகம் என்பது ஆலயங்களில் பெருமாளுக்குச் செய்யப்படுபவை.)

மொழி அழகு

செற்றார்க்கு வெப்பம் கொடுப்பவன் –

தீமையை எரிப்பவன். எரிப்பது வெம்மையால் ஏற்படுவது. எனவே வெப்பம்.

இவனை எதிர்த்து நிற்பதற்கு முடியாமல் பயத்தில் ஜுரம் கண்டு விடும். அதனால் வெப்பம்.

தீயோர் இவனை எதிர்த்து நிற்க வேண்டுமெனில் அளவிலாத பராக்கிரமத்தைக் காட்டியாக வேண்டும். அதனால் அவர்களுக்குள் வெம்மை எழும்.

ஆன்மிகம், தத்துவம்

விமலன் – மலம் ஏதும் இல்லாதவன், குறைகள் இல்லாதவன், குற்றம் இல்லாதவன், தூய்மையானவன்

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

தனது இயல்புக்கு அப்பாற்பட்ட எதுவுமே இல்லாத தன்மையே தூய்மை. இந்த ஸ்ருஷ்டி அனைத்தையும் படைத்த அந்தப் பரந்தாமன் இந்த ஸ்ருஷ்டிக்கு உள்ளும் வெளியிலும் விரவிப் படர்ந்தவன். அதேநேரத்தில், இந்த ஸ்ருஷ்டியின் எந்த அம்சத்தாலும் தொடப்படாதவன். அவன் தூய்மையிலும் தூய்மையானவன். அந்தத் தூய்மையை எவ்வாறு வார்த்தைகளால் வர்ணிப்பது?

பரமனின் தூய்மை, அமரத்துவம், சைதன்யம் என எதையுமே நமது அறிவினால் உள்வாங்கிக் கொள்ளவும் இயலாது, வார்த்தைகளால் விளக்கவும் முடியாது. வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத அவனை நம்மால் இயன்ற ஏதேதோ பெயரிட்டு அழைக்கிறோம். விமலன் என்பதும் அத்தகையதே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories