பாம்பாட்டியைக் கனவில் கண்டால் நன்மை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
முடவரைக் கனவில் கண்டால் தன விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
சகோதரி உங்கள் கனவில் வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளது என்பதை குறிக்கும்.
சகோதரர் கனவில் வந்தால் உங்களின் பொருளாதார நெருக்கடி தீரப்போகிறது என்பதை குறிக்கிறது.
தன்னை அலங்கரித்து கொள்வது போல கனவு வந்தால் தான் செய்யும் தொழிலில் நஷ்டம் வரும் என்பதை குறிக்கிறது.
குருவுடன் பேசுவதாகவும் அவரை காண்பதாகவும் கனவு வந்தால் விரைவில் நன்மை வீடு தேடி வரும் என்பதை குறிக்கிறது.
கல்வி போதிக்கும் ஆசிரியர் கனவில் வந்தால் வாழ்க்கையில் வளங்கள் அமோகமாக பெருகிவிடும் என்பதை குறிக்கிறது.
இரண்டு பேர் சண்டை போட்டு கொள்வது போல் கனவு வந்தால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை குலையும் என்பதை குறிக்கிறது.
ஆண்கள் சமையல் செய்வது போல் கனவு கண்டால் நீங்கள் வாழ்வில் சுலபமாக பெரும் புகழை அடைவீர்கள் என்று அர்த்தம்.
அரசனை கனவில் கண்டாலும் அரசரோடு நட்பு கொண்டாலும் நல்ல செலவாகும் மதிப்பும் உயர்வும் உண்டாகும்.