நாடாளுமன்றத்தில் ராகுல் பேச்சைக் கேட்டு… தலையில் அடித்துக் கொண்ட காங். எம்பி.,யால் பரபரப்பு!

cong mp scold rahul - 2026

ராகுல்காந்தி ஒவ்வொரு முறை வாயைத் திறக்கும் போதும் நாட்டின் பெரும்பாலான இந்தியர்கள் என்ன நினைப்பார்களோ அதை காங்கிரஸ் எம்பி ஒருவர் செயல்படுத்தி காட்டியிருக்கிறார். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சை கேட்டு முகம் சுளித்து தலையில் அடித்துக்கொண்டு தன்னுடைய அருவருப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அதில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பரம்பரை தலைவர் ராகுல் காந்தி பேச பேச அவர் பின்னால் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்பி ஒருவர் முகத்தை சுளித்துக் கொண்டு தலையில் அடித்து தன் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்.

நான் ஒரு ஜனநாயகவாதி, மற்ற நபரை பேச அனுமதிப்பேன் என சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ராகுல் காந்தி பதிலளித்தார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 31-ம் தேதி உரை நிகழ்த்தினார். நேற்று முன்தினம் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் பரம்பரைத் தலைவரும், எம்பி.,யுமான ராகுல் பேசினார். அப்போது, மத்திய அரசின் மீது மனம்போல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அப்போது ‘‘நீங்கள் யார் பேசுவதையும் கேட்பதில்லை. பாஜக.,வில் உள்ள என் சகோதர சகோதரிகள் பேச்சைக்கூட கேட்பதில்லை. தலித் சகா பேசுவதை நான் பார்த்தேன். அவருக்கு தலித் வரலாறு தெரியும். 3000 ஆண்டுகளாக தலித்துகளை ஒடுக்கியது யார் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அவர் தயக்கத்துடன் பேசுகிறார். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் மனதில் உள்ளதை என்னிடம் பேசியிருக்கிறார். ஆனால் அவர் தவறான கட்சியில் இருக்கிறார்’’ என்றார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

உடனே பாஜக., எம்பி., பஸ்வான் எழுந்து பேச முயற்சி செய்தார். அதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா, தற்போது பேச அனுமதி இல்லை. ராகுல் பேசும்போது குறுக்கிட வேண்டாம். உங்களுக்கு பிறகு நேரம் தருகிறேன் என்றார். ஆனால் ராகுல், பஸ்வானைப் பார்த்து, நீங்கள் பேசுவதற்கு நான் அனுமதிக்கிறேன் என்றார்.

இதனால் கோபமடைந்த அவைத்தலைவர் ஓம்பிர்லா, ‘‘அவர் பேசுவதற்கு அனுமதி கொடுக்க நீங்கள் யார்? இந்த அவையில் ஒருவர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது என்னுடைய உரிமை; அதை நீங்கள் எடுத்துக் கொள்ள முடியாது’’ என்றார். இதைக் கேட்டு அசட்டுத்தனமாக வழிந்த ராகுல், பின் தொடர்ந்து, ‘‘நான் ஜனநாயகவாதி. மற்றவர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பேன்’’ என்று மீண்டும் பேசினார்.

காங்கிரஸின் பரம்பரைத் தலைவராக இருந்து கொண்டு, மற்ற எவரையும் அந்த இடத்துக்கு வரவிடாமல் இளவரசுத்தனம் காட்டிக் கொண்டிருக்கும் ஒருவர், தான் ஒரு ஜனநாயகவாதி என்று குறிப்பிட்டது கேலிக்கூத்தாக உள்ளது என்று பலர் அதற்கு கருத்து தெரிவித்தனர்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories