நாடாளுமன்றத்தில் ராகுல் பேச்சைக் கேட்டு… தலையில் அடித்துக் கொண்ட காங். எம்பி.,யால் பரபரப்பு!

cong mp scold rahul - 2026

ராகுல்காந்தி ஒவ்வொரு முறை வாயைத் திறக்கும் போதும் நாட்டின் பெரும்பாலான இந்தியர்கள் என்ன நினைப்பார்களோ அதை காங்கிரஸ் எம்பி ஒருவர் செயல்படுத்தி காட்டியிருக்கிறார். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சை கேட்டு முகம் சுளித்து தலையில் அடித்துக்கொண்டு தன்னுடைய அருவருப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அதில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பரம்பரை தலைவர் ராகுல் காந்தி பேச பேச அவர் பின்னால் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்பி ஒருவர் முகத்தை சுளித்துக் கொண்டு தலையில் அடித்து தன் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்.

நான் ஒரு ஜனநாயகவாதி, மற்ற நபரை பேச அனுமதிப்பேன் என சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ராகுல் காந்தி பதிலளித்தார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 31-ம் தேதி உரை நிகழ்த்தினார். நேற்று முன்தினம் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் பரம்பரைத் தலைவரும், எம்பி.,யுமான ராகுல் பேசினார். அப்போது, மத்திய அரசின் மீது மனம்போல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அப்போது ‘‘நீங்கள் யார் பேசுவதையும் கேட்பதில்லை. பாஜக.,வில் உள்ள என் சகோதர சகோதரிகள் பேச்சைக்கூட கேட்பதில்லை. தலித் சகா பேசுவதை நான் பார்த்தேன். அவருக்கு தலித் வரலாறு தெரியும். 3000 ஆண்டுகளாக தலித்துகளை ஒடுக்கியது யார் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அவர் தயக்கத்துடன் பேசுகிறார். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் மனதில் உள்ளதை என்னிடம் பேசியிருக்கிறார். ஆனால் அவர் தவறான கட்சியில் இருக்கிறார்’’ என்றார்.

உடனே பாஜக., எம்பி., பஸ்வான் எழுந்து பேச முயற்சி செய்தார். அதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா, தற்போது பேச அனுமதி இல்லை. ராகுல் பேசும்போது குறுக்கிட வேண்டாம். உங்களுக்கு பிறகு நேரம் தருகிறேன் என்றார். ஆனால் ராகுல், பஸ்வானைப் பார்த்து, நீங்கள் பேசுவதற்கு நான் அனுமதிக்கிறேன் என்றார்.

இதனால் கோபமடைந்த அவைத்தலைவர் ஓம்பிர்லா, ‘‘அவர் பேசுவதற்கு அனுமதி கொடுக்க நீங்கள் யார்? இந்த அவையில் ஒருவர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது என்னுடைய உரிமை; அதை நீங்கள் எடுத்துக் கொள்ள முடியாது’’ என்றார். இதைக் கேட்டு அசட்டுத்தனமாக வழிந்த ராகுல், பின் தொடர்ந்து, ‘‘நான் ஜனநாயகவாதி. மற்றவர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பேன்’’ என்று மீண்டும் பேசினார்.

காங்கிரஸின் பரம்பரைத் தலைவராக இருந்து கொண்டு, மற்ற எவரையும் அந்த இடத்துக்கு வரவிடாமல் இளவரசுத்தனம் காட்டிக் கொண்டிருக்கும் ஒருவர், தான் ஒரு ஜனநாயகவாதி என்று குறிப்பிட்டது கேலிக்கூத்தாக உள்ளது என்று பலர் அதற்கு கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories