March 25, 2025, 3:09 PM
32.4 C
Chennai

நாடாளுமன்றத்தில் ராகுல் பேச்சைக் கேட்டு… தலையில் அடித்துக் கொண்ட காங். எம்பி.,யால் பரபரப்பு!

ராகுல்காந்தி ஒவ்வொரு முறை வாயைத் திறக்கும் போதும் நாட்டின் பெரும்பாலான இந்தியர்கள் என்ன நினைப்பார்களோ அதை காங்கிரஸ் எம்பி ஒருவர் செயல்படுத்தி காட்டியிருக்கிறார். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சை கேட்டு முகம் சுளித்து தலையில் அடித்துக்கொண்டு தன்னுடைய அருவருப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அதில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பரம்பரை தலைவர் ராகுல் காந்தி பேச பேச அவர் பின்னால் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்பி ஒருவர் முகத்தை சுளித்துக் கொண்டு தலையில் அடித்து தன் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்.

நான் ஒரு ஜனநாயகவாதி, மற்ற நபரை பேச அனுமதிப்பேன் என சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ராகுல் காந்தி பதிலளித்தார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 31-ம் தேதி உரை நிகழ்த்தினார். நேற்று முன்தினம் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் பரம்பரைத் தலைவரும், எம்பி.,யுமான ராகுல் பேசினார். அப்போது, மத்திய அரசின் மீது மனம்போல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அப்போது ‘‘நீங்கள் யார் பேசுவதையும் கேட்பதில்லை. பாஜக.,வில் உள்ள என் சகோதர சகோதரிகள் பேச்சைக்கூட கேட்பதில்லை. தலித் சகா பேசுவதை நான் பார்த்தேன். அவருக்கு தலித் வரலாறு தெரியும். 3000 ஆண்டுகளாக தலித்துகளை ஒடுக்கியது யார் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அவர் தயக்கத்துடன் பேசுகிறார். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் மனதில் உள்ளதை என்னிடம் பேசியிருக்கிறார். ஆனால் அவர் தவறான கட்சியில் இருக்கிறார்’’ என்றார்.

உடனே பாஜக., எம்பி., பஸ்வான் எழுந்து பேச முயற்சி செய்தார். அதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா, தற்போது பேச அனுமதி இல்லை. ராகுல் பேசும்போது குறுக்கிட வேண்டாம். உங்களுக்கு பிறகு நேரம் தருகிறேன் என்றார். ஆனால் ராகுல், பஸ்வானைப் பார்த்து, நீங்கள் பேசுவதற்கு நான் அனுமதிக்கிறேன் என்றார்.

இதனால் கோபமடைந்த அவைத்தலைவர் ஓம்பிர்லா, ‘‘அவர் பேசுவதற்கு அனுமதி கொடுக்க நீங்கள் யார்? இந்த அவையில் ஒருவர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது என்னுடைய உரிமை; அதை நீங்கள் எடுத்துக் கொள்ள முடியாது’’ என்றார். இதைக் கேட்டு அசட்டுத்தனமாக வழிந்த ராகுல், பின் தொடர்ந்து, ‘‘நான் ஜனநாயகவாதி. மற்றவர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பேன்’’ என்று மீண்டும் பேசினார்.

காங்கிரஸின் பரம்பரைத் தலைவராக இருந்து கொண்டு, மற்ற எவரையும் அந்த இடத்துக்கு வரவிடாமல் இளவரசுத்தனம் காட்டிக் கொண்டிருக்கும் ஒருவர், தான் ஒரு ஜனநாயகவாதி என்று குறிப்பிட்டது கேலிக்கூத்தாக உள்ளது என்று பலர் அதற்கு கருத்து தெரிவித்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

Topics

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

Entertainment News

Popular Categories