ஸ்மார்ட்போன்: அவசரகால அழைப்பு.. மிக முக்கியம் மக்ககளே..!

Published:

call - 2026

இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள். ஆனால், அந்த ஸ்மார்ட்போன் நம்முடைய அவசர காலத்தில் உயரைக் காப்பாற்றுவதற்கு பயன்படுத்த முடியும் என்பதை எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறோம்.

செட்டிங்ஸில் செய்யும் சிறிய மாற்றம், ஆபத்து காலத்தில் இருக்கும் நம் உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதால், அது என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

அதாவது, போனில் இருக்கும் தொடர்புகளுக்கு (Contacts) செல்லாமலேயே லாக்ஸ்கீரின் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்ளலாம்.

அவசர காலத்தில் லாக்ஸ்கிரீனை நீக்குவதற்கு கூட டைம் இருக்காது. அந்த சமயத்தில் லாக்ஸ்கீரின் வழியாகவே நீங்கள் எமர்ஜென்சி கால் செய்யலாம். நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அவசரகால தொடர்புகளைச் சேமித்து வைத்திருக்க வேண்டும்.

உங்கள் போனில் My Info அல்லது ‘My Contacts சென்று எமர்ஜென்சி தொடர்புகள் (Emergency Contacts) என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்களுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் எண்களை சேர்த்து வைக்க வேண்டும்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

அந்த தொடர்புகளுக்கு நீங்கள் லாக் ஸ்கீரினில் இருந்தவாறே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஐபோன் வாடிக்கையாளர்களும் இதேபோல் எமர்ஜென்சி தொடர்புகளை சேமித்து வைக்கும் செட்டிங்ஸ் உள்ளது.

அதில் தொடர்புகளை சேமித்து வைத்து, அவசர கால உதவிக்கு அழைக்க முடியும். சாதாரணமாக பார்க்கும்போது இந்த தகவல் எளிமையாக தெரியலாம். அவசர காலத்தில் இருப்பவர்களுக்கே அதன் அருமை தெரியும்.

Related articles

Recent articles

spot_img