தேவையற்ற மெயில்கள்.. தவிர்க்க இப்படி செய்யுங்க.‌!

gmail - 2026

உங்கள் இன்பாக்சில் அதிகளவில் தேவையில்லாமல் குப்பை போல கொட்டிக்கிடக்கும் மெயில்களை குறைப்பதற்கான விரைவான வழி அவற்றை முழுமையாக நீக்குவதே ஆகும்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்டோரிலிருந்து வரும் மெயில்களை நீக்க விரும்பினால் இன்பாக்சின் தேடுதல் பகுதியில் அந்த கடையின் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியைத் தேடி, அதிலிருந்து வந்த அனைத்து மெயில்களையும் நீக்கலாம் அல்லது ட்ராஷ்-க்கு அனுப்பலாம்.

ட்ராஷ் (Trash) பகுதியில் இருக்கும் மெயில்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு தானாகவே அழிந்துவிடும் அல்லது நாமே கூட அதனை செய்யலாம்.

இவ்வாறு பல மெயில்களை டெலீட் செய்த பிறகும் உங்களது இன்பாக்ஸ் குப்பை நிறைந்திருப்பது போல உங்களுக்கு தோன்றினால் மேலும் சில வழிகளை பின்பற்றலாம்.

உங்களது இன்பாக்சில் அதிக மெயில்கள் நிறைந்து உங்களுக்கு எரிச்சலூட்டும்படியாக இருந்தாலும், சில சமயம் அதிலுள்ள மெயில்கள் உங்களுக்கு தேவையானதாக இருக்கும்.

அதனை டெலீட்டும் செய்யக்கூடாது அதே சமயம் உங்களது இன்பாக்சும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது.

உங்கள் பிரைமரி இன்பாக்சில் உள்ள மெயில்களை ஆர்ச்சிவ் செய்யலாம், இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் இன்பாக்சில் மெயில்கள் அதிகமிருக்காது,

அதே சமயம் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் ஆர்ச்சிவ் பகுதியில் உள்ள மெயில்களையும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

இந்த ஆர்ச்சிவ் பகுதியில் குறிப்பிட்ட ஒருவரது மெயிலையோ அல்லது மொத்த மெயிலையுமோ சேமித்துக்கொள்ளலாம். எப்போதெல்லாம் வேண்டுமோ அப்போது அதனை உங்களது இன்பாக்ஸ் பகுதிக்குள் கொண்டு வரலாம்.

இந்த ஆர்ச்சிவ்-ன் ஐகான் கிட்டத்தட்ட 3டி பேட்டி போல காட்சியளிக்கும், அந்த ஐகான் நடுவில் கீழ்வாக்கில் அம்புக்குறி போடப்பட்டு இருக்கும். அடுத்ததாக ஒரு நிறுவனத்திலிருந்து பெறப்படும் மெயிலைகளை அன்சப்ஸ்க்ரைப் செய்வதன் மூலம் தேவையற்ற மெயில்கள் வருவதை தடுக்கலாம்.

குறிப்பிட்ட நிறுவனம் அல்லது ஸ்டோரிலிருந்து வந்திருக்கும் மெயிலில் கீழ் பகுதியில் அன்சப்ஸ்க்ரைப் என்கிற ஆப்ஷன் காட்டப்பட்டு இருக்கும், அதனை க்ளிக் செய்ய வேண்டும்.

பின்னர் நீங்கள் அன்சப்ஸ்க்ரைப் செய்வதற்கான காரணம் அதில் கேட்கப்படும் அதில் ஏதேனும் ஒரு காரணத்தை நீங்கள் தேர்வு செய்யவேண்டும்.

இவ்வாறு செய்த பின் அந்த குறிப்பிட்ட இடத்திலிருந்து உங்களுக்கு மெயில்கள் எதுவும் வராது. அதேபோல ஒரு தனி நபரிடம் இருந்து வரும் மெயில்களை நீங்கள் தவிர்க்கலாம்.

அதற்கு நீங்கள் தடுக்க விரும்பும் ஒருவரின் மெயிலை திறந்து, அதன் வலது பக்கத்தில் உள்ள மூன்று-புள்ளிகள் ஐகானைக் கிளிக் செய்யவும்.

அதில் பிளாக் ஆப்ஷனை க்ளிக் செய்யவேண்டும், இவ்வாறு செய்தபின் அந்த நபரிடம் இருந்து உங்களுக்கு எப்போதும் மெயில் வராது, மாறாக அந்த மெயில்கள் ஸ்பேமுக்கு சென்றுவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories