இன்ஸ்டாவில் புதிய அம்சம்.. பயனர்கள் குஷி!

Instagram - 2026

பிரபல சமூக ஊடகத்தளமான இன்ஸ்டாகிராம், தன் பிளாட்ஃபார்மில் சேர்ப்பதற்காக ஒரு புதிய அம்சத்தை டெஸ்ட் செய்து வருகிறது.

அந்த அம்சம் யூசர்கள் தங்கள் ப்ரொஃபைல்களில் தாங்கள் விருப்பப்பட்ட போஸ்ட்-களை ‘பின்’ செய்து வைக்க அனுமதிக்கும். அதாவது உங்கள் ‘கூகுள் கீப்’ மெயின் ஸ்க்ரீனின் மேற்புறத்தில் உள்ள ‘பின்’ செய்யப்பட்ட நோட்ஸ்-களைப் போலவே, இன்ஸ்டாகிராமில் பின் செய்யப்படும் சில முக்கிய போஸ்ட்கள் மூலம், உங்கள் ப்ரொஃபைலை பார்க்கும் பார்வையாளர்கள் உங்களைப் பற்றி விரைவாக தெரிந்துகொள்ள முடியும்.

டெக் க்ரன்ச் வழியாக வெளியான ஒரு புதிய அறிக்கையின்படி, சோதனை செயல்முறையின் ஒரு பகுதியாக இந்த அம்சம் தற்போது சில பயனர்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது.

அந்த யூசர்கள் ட்விட்டரில் பின் செய்யப்பட்ட ட்வீட்கள் அல்லது டிக்டாக்கில் உள்ள வீடியோக்களைப் போலவே தங்கள் ப்ரொஃபைல்களில் போஸ்ட்களை பின் செய்யலாம்.

இந்த அம்சம் பல மாதங்களாக செயல்பாட்டில் இருப்பதாகவும் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அம்சத்திற்கான அணுகல் உள்ளவர்கள், ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டின் ‘த்ரீ டாட்ஸ் மெனு’வில் உள்ள ‘பின் டூ யுவர் ப்ரொஃபைல்’ (Pin to your profile) என்கிற விருப்பத்தைப் பார்ப்பார்கள்.

இதுகுறித்து மெட்டாவின் செய்தித் தொடர்பாளர், “நாங்கள் ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருகிறோம், இது யூசர்களின் ப்ரொஃபைலில் போஸ்ட்களை இடம்பெற அனுமதிக்கும்” என்று தெரிவித்து உள்ளார்.

நினைவூட்டும் வண்ணம், பிரபல ட்விட்டர் யூசர் ஆன அலெஸாண்ட்ரோ பலுஸி இந்த அம்சத்தை கடந்த ஜனவரியிலேயே கண்டறிந்தார், மேலும் இந்த ‘பின்னிங்’ விருப்பம் எப்படி இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தி இருந்தார்.

பின் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட்கள் ஆனது, கிரியேட்டர்ஸ் மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் தங்கள் ப்ரொஃபைல்களின் மேல் தங்களின் சிறந்த படைப்புகளை முன்னிலைப்படுத்த அனுமதிக்கும்.

இதனால் இன்ஸ்டாகிராமில் பார்வையாளர்கள் தங்களுக்குத் தேவையானதை கண்டுபிடிக்க பல போஸ்ட்களை ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

குறிப்பாக கலைஞர்கள் தங்களின் சிறந்த மற்றும் மிகவும் பொருத்தமான படைப்புகளை காட்சிப்படுத்ததும் ஒரு ‘போர்ட்ஃபோலியோவாக’ இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஆனால் இந்த அம்சம் அனைத்து இன்ஸ்டாகிராம் யூசர்களுக்கும் கிடைக்க நீண்ட காலம் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளவும். ஏனெனில் இந்த அம்சம் தற்போது சோதனையில் உள்ளது .

எனவே இது ஸ்டேபிள் வெர்ஷனுக்கு வர இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம். மேலும் இன்ஸ்டாகிராம் நிறுவனம், ஒரு புதிய அம்சத்தை அனைவருக்கும் அறிமுகம் செய்யும் முன்னர், குறிப்பிட்ட சில நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அதை அறிமுகம் செய்யும் வழக்கத்தினை கொண்டுள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட அம்சத்தை பார்க்க இந்திய பயனர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். அனைவருக்கும் இந்த அம்சம் எப்போது வரும் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories